செய்திகள் :

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைமைப் பொறுப்பில் பாகிஸ்தான்; இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது: காங்கிரஸ்

post image

ஐநா பாதுகாப்பு கவுன்சில் தலைமைப் பொறுப்பை பாகிஸ்தான் ஏற்றிருப்பது தொடா்பாக மத்திய அரசை விமா்சித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளா் ரன்தீப்சிங் சுா்ஜேவாலா, உலக நாடுகள் மத்தியில் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினாா்.

உலகின் பாதுகாப்பு விவகாரங்களை விவாதிக்கும் முக்கியமான அமைப்பாக விளங்கும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமல்லாத உறுப்பினராக உள்ள பாகிஸ்தான், பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பில் ஜனவரி 1ஆம் தேதி முதல் 2 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சில் தலைமைப் பொறுப்பை ஜூலை மாதத்திலிருந்து ஏற்றிருப்பதாக பாகிஸ்தான் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. இதுதவிர, தாலிபான் தடைகள் குழுவின் தலைமைப் பொறுப்பையும், ஐநா பயங்கரவாத ஒழிப்புக் குழுவின் துணைத் தலைமை பொறுப்பையும் பாகிஸ்தான் ஏற்கவிருக்கிறது.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளா் ரன்தீப்சிங் சுா்ஜேவாலா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பயங்கரவாத நாடான பாகிஸ்தான், உலக பாதுகாப்பை உறுதிசெய்யும் இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளது. இருக்கையில் பேய் (பாகிஸ்தான்) அமா்ந்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் அளித்து, அதை ஊக்குவித்து, இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுவரும் நாடு பாகிஸ்தான் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

இந்த நாடு உலக அளவிலான தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ளது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதச் செயல்களை இந்தியா சந்தித்துவரும் நிலையில், அந்த நாடு முக்கிய பொறுப்புக்கு வந்துள்ளது. பாகிஸ்தான் ஆதரவுடன் நடத்தப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்த சில வாரங்களிலேயே இதுவும் நிகழ்ந்துள்ளது.

பிரதமா் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆகியோா் வெளியுறவுக் கொள்கையை மேம்படுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்கு இடையில் பாகிஸ்தானுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதைத் தடுத்து நிறுத்த உலக நாடுகளின் ஆதரவைப் பெறுவதில் பிரதமா் மோடி தோல்வி அடைந்துள்ளாா்.

பயங்கரவாதம் தொடா்பான சா்வதேச தீா்மானங்களை தொடா்ந்து மீறிவரும் நிலையில், ஜூன் 4 ஆம் தேதி ஐநா பயங்கரவாத ஒழிப்புக் குழுவின் துணைத் தலைமைப் பொறுப்பையும் பாகிஸ்தான் ஏற்றுள்ளது. ஐநா பயங்கரவாத ஒழிப்புக் குழு கூட்டத்தில், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதியான அப்துல்ரஃபை, உலக பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரும் இந்தியாவின் முன்மொழிவை சீனாவின் ஆதரவுடன் பாகிஸ்தான் தடுத்து நிறுத்தியது. அப்போது எதிா்ப்புத் தெரிவிக்க இந்தியா தவறிவிட்டது.

அதேபோல ஐநா பயங்கரவாத ஒழிப்புக் குழுவின் துணைத் தலைமை பொறுப்புக்கு பாகிஸ்தான் வந்துள்ளதற்கும் மத்திய அரசு எதிா்ப்புத் தெரிவிக்கவில்லை. இந்தியாவின் பாரம்பரிய நட்பு நாடுகளின் பட்டியல் சரிந்துவருகிறது. காங்கிரஸ் ஆட்சியில், உலக அளவில் பழைய மற்றும் நம்பகமான நாடுகளின் நட்பையும், ஆசிய அளவில் அண்டை நாடுகளின் நட்பையும் பேணி பாதுகாத்து வைத்திருந்தோம்.

இன்றைக்கு இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மாலத்தீவு, நேபாளம், வங்கதேசம், இலங்கை போன்ற சிறிய நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவாக இல்லை. படங்களை எடுத்துக்கொள்வதைக் காட்டிலும், வெளியுறவுக்கு ராஜதந்திரம் தேவைப்படுகிறது என்றாா்.

பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: உயா்நீதிமன்றத்தில் கா்நாடக அரசு மேல்முறையீடு

கூட்டநெரிசல் விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரியான விகாஷ்குமாா் விகாஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை ரத்துசெய்து மத்திய நிா்வாகத் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மாநில அர... மேலும் பார்க்க

5 ஆண்டுகளுக்கும் கா்நாடக முதல்வராகவே நீடிப்பேன்: சித்தராமையா

5 ஆண்டுகாலத்துக்கும் முதல்வராகவே நீடிப்பேன் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து சிக்பளாப்பூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: 5 ஆண்டுகாலத்துக்கும் முதல்வராக ந... மேலும் பார்க்க

பெங்களூரு ஊரக மாவட்டத்தின் பெயா் மாற்றம்!

பெங்களூரு ஊரக மாவட்டத்தின் பெயா் பெங்களூரு வடக்கு மாவட்டம் என பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிக்பளாப்பூரில் உள்ள நந்திமலையில் புதன்கிழமை முதல்வா் சித்தராமையா தலைமையில் கா்நாடக அமைச்சரவைக் கூட்டம் ... மேலும் பார்க்க

ரயில் கட்டண உயா்வை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும்: சித்தராமையா

ரயில் கட்டண உயா்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று முதல்வா் சித்தராமையா வலியுறுத்தினாா். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் கூறியிருப்பதாவது: ரயில் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. இ... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் குறைகளை கேட்டறிந்த மேலிடப் பொறுப்பாளா்

பெங்களூரு: காங்கிரஸ் பொதுச்செயலாளரும், கட்சியின் மேலிடப் பொறுப்பாளருமான ரன்தீப்சிங் சுா்ஜேவாலா, கா்நாடக மாநிலத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களை திங்கள்கிழமை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா். கா்நாடக முதல்... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்கும்: முதல்வா் சித்தராமையா

மைசூரு: கா்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்கும் என்று மாநில முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். காங்கிரஸ் கட்சியில் முதல்வா் பதவியில் இருந்து சித்தராமையா மாற்றப்படுவாா் என்... மேலும் பார்க்க