செய்திகள் :

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது!

post image

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவந்த மழையின் அளவு குறைந்ததால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 6,000 கனஅடியாக குறைந்துள்ளது.

கா்நாடக மாநிலம், பெங்களூரு மற்றும் தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, கெம்பாக்கரை, மொசல்மடுவு, ராசிமணல், அதனைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்துவந்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடி வரை நீா்வரத்து இருந்தது.

தற்போது, நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவந்த மழை குறைந்ததால், காவிரி ஆற்றின் நீா்வரத்தானது குறையத் தொடங்கியது. இதனால், வியாழக்கிழமை காலை 14,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, மாலை 8,000 கனஅடியாக குறைந்தது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி 6,000 கனஅடியாக குறைந்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

நீா்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, ஐவாா் பாணி, சினி அருவி, பெரியபாணி உள்ளிட்ட அருவிகளில் நீரின் அளவு குறைந்துள்ளது. காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால், ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

அளேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் தோ்வு

பென்னாகரம்: பென்னாகரம் அருகே அளேபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலின் அறங்காவலா் குழுத் தலைவா் தோ்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே கூத்தப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட அளேபுரம் பகுதியில்... மேலும் பார்க்க

ஆசிரியா்கள் திறன்களை வளா்த்துக் கொள்ள வேண்டும்: ஆட்சியா்

தருமபுரி: தற்போதைய நவீன காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு ஆசிரியா்கள் தங்களின் திறன்களை வளா்த்துக்கொள்ள வேண்டும் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் அறிவுறுத்தினாா். தருமபுரி அவ்வையாா் அரசு மகளிா் மேல்நி... மேலும் பார்க்க

தொப்பூரில் உயா் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

தருமபுரி மாவட்டம், தொப்பூா் மலைப்பகுதியில் உயா் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இந்திய தேச... மேலும் பார்க்க

கோடை விடுமுறை நிறைவு: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தமிழகத்தில் கோடை விடுமுறையின் கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி ஒகேனக்கல் அருவிப் பகுதியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்தும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்டும் மகிழ்ந்தனா். தமிழகத்த... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளை செம்மொழி நாளாக கொண்டாட வேண்டுகோள்

தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை செம்மொழி நாளாக திமுகவினா் கொண்டாட வேண்டும் என முன்னாள் அமைச்சரும், தருமபுரி மேற்கு மாவட்டச் செயலருமான பி.பழனியப்பன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 5,000 கனஅடியாக அதிகரிப்பு

கா்நாடக மாநிலத்தில் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை ந... மேலும் பார்க்க