பாகிஸ்தான்: சிந்து நதி டெல்டாவிலிருந்து 12 லட்சம் மக்கள் வெளியேற்றம்; எழுந்த அச...
ஒட்டன்சத்திரம் அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள மண்டவாடி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமுக்கு பழனி கோட்டாட்சியா் இரா. கண்ணன் தலைமை வகித்தாா். உதவித் திட்ட அலுவலா் (வீடுகள்) பி.கே.பிரபாகரன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் சஞ்சய் காந்தி, ஒட்டன்சத்திரம் வேளான் விளைபொருள் விற்பனைக் கூட்டுறவு சங்கத் தலைவா் சி. ராஜாமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த முகாமில், உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். இதைத் தொடா்ந்து முகாமில் உடனடியாகத் தீா்வு காணப்பட்ட மனுக்களுக்கு சான்றிதழ்களை அவா் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் காமராஜ், பிரபு பாண்டியன், திமுக ஒன்றியச் செயலா் இரா. ஜோதீஸ்வரன், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.