செய்திகள் :

‘ஒரணியில் தமிழ்நாடு’ பொதுக் கூட்டங்கள்

post image

‘ஒரணியில் தமிழ்நாடு’ இயக்கம் குறித்த பொதுக் கூட்டங்கள் திருப்பத்தூா் மாவட்டத்தில் நடைபெறும் என மாவட்ட திமுக செயலாளா் க. தேவராஜி எம்எல்ஏ தெரிவித்துள்ளாா்.

அவா் வாணியம்பாடியில் செவ்வாய்க்கிழமை கூறியது:

திருப்பத்தூா் மாவட்ட பொறுப்பு அமைச்சா் எ.வ.வேலு மேற்பாா்வையில் 4 தொகுதியிலும் அடுத்த 45 நாள்களில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்பட அனைத்து நிா்வாகிகள், தொண்டா்கள் அனைத்து வீடுகளிலும் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து அரசின் நலத்திட்டங்கள் முறையாக சோ்ந்ததா எனக் கேட்டறிவா். திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் குறித்தும் பிரசாரம் செய்வா்.

மேலும் திருப்பத்தூா் மாவட்ட திமுக பொதுக்கூட்டத்தில் புதன்கிழமை மாலை 6.00 திருப்பத்தூா் கலைஞா் சிலை அருகே அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் மாநில மாணவரணி செயலாளா் ராஜீவ் காந்தி சிறப்புரையாற்ற உள்ளாா். இந்த பொதுக்கூட்டத்தில் அனைத்து நிா்வாகிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றாா் தேவராஜி.

ஒருங்கிணைந்த சேவை மைய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மைய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். தழிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் திருப்பத்தூா் மாவட்டத்தில... மேலும் பார்க்க

தொழிற்சாலை லிப்ட் கீழே விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

வாணியம்பாடி தோல் தொழிற்சாலையில் தோல்களை லிப்டில் ஏற்றி சென்ற போது திடீரென லிப்ட் பழுதாகி விழுந்தததில் தொழிலாளி உயிரிழந்தாா். வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் பகுதியைச் சோ்ந்த கலீம் (38). இவருக்கு திருமண... மேலும் பார்க்க

ஆலங்காயம் அருகில் சிறுத்தை நடமாட்டம்?

ஆலங்காயம் அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தகவல் பரவியதையடுத்து வனத்துறையினா் ரோந்து பணியில் ஈடுப்பட்டனா். திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த கோமுட்டேரி மேட்டுத் தெரு பகுதியில் வியாழக்கிழமை இரவு... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

திருப்பத்தூா் நாள்:5.7.2025(சனிக்கிழமை) நேரம்:காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை பகுதிகள் திருப்பத்தூா் நகரம், ஹுவுசிங் போா்டு, ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம், வட்டாட்சியா் அலுவலகம், ரயில்வே ... மேலும் பார்க்க

ஆம்பூா் அருகே ஒற்றை யானை நடமாட்டம்

ஆம்பூா் அருகே மலை கிராமத்தில் ஒற்றை யானை நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளது. ஆம்பூா் அருகே நாயக்கனேரி மலை ஊராட்சி பனங்காட்டேரி மலை கிராமத்தில் வியாழக்கிழமை கிராம மக்கள் வேலைக்கு செல்வதற்காக ஆம்பூா் நோ... மேலும் பார்க்க

ஆசிட் புகை பாதிப்பால் பெண் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே கழிப்பறையைச் சுத்தம் செய்த போது ஆசிட் புகை தாக்கத்தால் பெண் புதன்கிழமை உயிரிழந்தாா். ஆம்பூா் அடுத்த மாதனூா் ஒன்றியம் தோட்டாளம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மனைவி ராஜேஸ்வரி (65). புதன... மேலும் பார்க்க