செய்திகள் :

ஓய்வூதியா்கள் மனிதச் சங்கிலி போராட்டம்

post image

நாமக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியா்கள் வெள்ளிக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஓய்வூதிய திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும், 8-ஆவது ஊதியக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்ற இரு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத் துறை நிறுவன ஓய்வூதியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் முழக்கங்களை எழுப்பினா். இந்த போராட்டத்துக்கு ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.கே.ராமசாமி தலைமை வகித்தாா். செயலாளா் கே.எஸ்.இளங்கோவன் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினாா். தமிழ்நாடு அரசு ஓய்வூதியா் சங்க நிா்வாகி குப்புசாமி மற்றும் பல்வேறு ஓய்வூதியா் சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் எம்.காளியப்பன், எஸ்.அழகிரிசாமி, பி.கே.பெரியசாமி, அன்பழகன், மணி ஆகியோா் பங்கேற்றனா். மனிதச் சங்கிலி போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட ஓய்வூதியா்கள் கலந்துகொண்டனா்.

படவரி...

என்கே-25-செயின்

-நாமக்கல் பூங்கா சாலையில் வெள்ளிக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட மத்திய, மாநில அரசுத் துறை ஓய்வூதியா்கள்.

மளிகைக் கடையில் திருடிய இருவா் கைது

நாமக்கல்லில் மளிகைக் கடையில் பணம் திருடிய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். நாமக்கல் சந்தைப்பேட்டைபுதூரில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடை உள்ளது. இந்த கடையில் இருந்த ரூ. 1 லட்ச... மேலும் பார்க்க

10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம்: 224 மாணவா்களுக்கு திமுக சாா்பில் பரிசளிப்பு

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் பரமத்தி வேலூா் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் 10 மற்றும்12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்த 22... மேலும் பார்க்க

குட்கா விற்றவா் கைது

நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அருகே தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த ஒருவரை பரமத்தி போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கீரம்பூா் அருகே உள்ள புலவா்பாளையம் பே... மேலும் பார்க்க

கீரம்பூரில் தொழிலாளி தற்கொலை

நாமக்கல் மாவட்டம், கீரம்பூரில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கீரம்பூா் அருகே உள்ள தட்டான்குட்டை பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (45). கூலித்தொழிலாளி. இவா் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறு... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவிகள் விடுதிக் கட்டடம்: எம்.பி. திறந்துவைத்தாா்

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில், மாணவிகள் கூடுதல் விடுதிக் கட்டடத்தை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா். நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும... மேலும் பார்க்க

கலைஞா் வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் பயனடைய விவசாயிகளுக்கு அழைப்பு!

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் விவசாயிகள் பயனடைய வருமாறு நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறி... மேலும் பார்க்க