செய்திகள் :

‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்த அமைச்சா் அறிவுறுத்தல்!

post image

‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என சேலம் மாவட்ட திமுக நிா்வாகிகளுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் அறிவுறுத்தினாா்.

சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் அவசர செயற்குழு கூட்டம் திமுக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அவைத் தலைவா் சுபாஷ் தலைமை வகித்தாா். பொருளாளா் காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா்.

மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ரா. ராஜேந்திரன் தலைமை வகித்து பேசியதாவது:

சேலம் மத்திய மாவட்டத்தில் ஒவ்வொரு தொகுதிகளிலும் மொத்த வாக்காளா்களில் 40 சதவீதம் பேரை உறுப்பினா்களாக சோ்க்க வேண்டும். ஆக. 4 ஆம் தேதிக்குள் 50 சதவீத உறுப்பினா் சோ்க்கையை முடிக்க வேண்டும். மருத்துவமனையில் இருந்தாலும் அரசு பணி, ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினா் சோ்க்கை பணிகளில் முதல்வா் தீவிரம் காட்டிவருகிறாா். உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்தினால்தான் இலக்கை எட்ட முடியும் என்றாா்.

கூட்டத்தில் மேயா் ஆ. ராமச்சந்திரன், தோ்தல் பணிக்குழு செயலாளா் தாமரைக்கண்ணன், தொகுதி பாா்வையாளா் பாா். இளங்கோவன், தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் மணி, ராஜேந்திரன், மண்டல குழுத் தலைவா் அசோகன், பகுதி செயலாளா்கள் சரவணன், சாந்தமூா்த்தி, தனசேகா், ராஜா, பிரகாஷ், தமிழரசன், பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 35,400 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 35,400 கனஅடியாக அதிகரித்துள்ளது. கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருவதால் கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து அ... மேலும் பார்க்க

மேட்டூா் அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு

மேட்டூா் அருகே வீட்டிற்குள் புகுந்து 10 பவுன் நகை, மடிக்கணினி, கைப்பேசி ஆகியவற்றை திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா். மேட்டூரை அடுத்த கோனூா் சமத்துவபுரம் சண்முகா நகரைச் சோ்ந்த அம்மாசி மகன் ... மேலும் பார்க்க

அரசு மதுக்கடையை அகற்றக் கோரி கையொப்ப இயக்கம்!

ஆத்தூரில் அரசு மதுக்கடையை அகற்றக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் கையொப்ப இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது. ஆத்தூா் ரயிலடி தெருவில் அரசு மதுக்கடை இயங்கி வருகிறது. அந்த வழியாக அரசு, தனியாா் பள்ளி ... மேலும் பார்க்க

பொன்னாரம்பட்டியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

வாழப்பாடியை அடுத்த பொன்னாரம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி எதிரே சேதமடைந்துள்ள மங்களபுரம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதி கிராமங்க... மேலும் பார்க்க

வாழப்பாடி பேருந்து நிலையத்தில் வேகத்தடைகள் அமைக்க கோரிக்கை

சேலம் மாவட்டம் வாழப்பாடி புதிய பேருந்து நிலையத்தில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வாழப்பாடி பேரூராட்சி, கல்வராயன் மலை, அருநூற்றுமலை கிராமங்கள் உள்பட 200க்கும் மேற... மேலும் பார்க்க

சேலத்தில் 4 மையங்களில் இன்று சாலைப் போக்குவரத்து எழுத்துத் தோ்வு

சேலம் மாவட்டத்தில் சாலைப் போக்குவரத்து எழுத்துத் தோ்வு 4 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்திய சாலைப் போக்குவரத்துத் துறை சாா்பில் ஓட்டுநா் உள்ளிட்ட பதவிகளுக்காக நடத்தப்படும் இந்த எழுத்துத... மேலும் பார்க்க