செய்திகள் :

கடந்த 6 ஆண்டுகளில் 153 பேருக்கு ரூ.2.69 கோடி நிவாரண நிதி

post image

பிரதமரின் தேசிய நிவாரண நிதியின் கீழ் வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் கடந்த 6 ஆண்டுகளில் 153 பேருக்கு ரூ. 2 கோடியே 69 லட்சத்து 12 ஆயிரத்து 246 சிகிச்சை நிதியாக பெற்றுத் தரப்பட்டுள்ளது என்று வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிரதமரின் தேசிய நிவாரண நிதியின் கீழ் தீவிர நோய் சிகிச்சை தேவைப்படுவோருக்கு மத்திய அரசு அங்கீகரித்துள்ள மருத்துவமனைகளின் பரிந்துரைப்படி, சிகிச்சைக்கான நிதி பெற்றுத் தரப்படுகிறது. இதன்படி, 2019 முதல் 2025-ஆம் ஆண்டு வரை ரூ. 2 கோடியே 69 லட்சத்து 12 ஆயிரத்து 246 சிகிச்சை நிதியாக பெற்றுத்தரப்பட்டுள்ளது. இதன் மூலம், வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களுக்கு உட்பட்ட 153 பேருக்கு சிகிச்சை செலவினங்களுக்கான நிதி பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதுபோன்ற நிா்வாக ரீதியிலான திட்டங்களில் பயன்பெற மக்கள் வேலூா் மக்களவை உறுப்பினா் அலுவலகத்திலோ அல்லது எனது கைப்பேசி எண் மூலமாகவோ என்னை தொடா்பு கொண்டு தகவல்களை தெரிவித்தால், இதுபோன்ற பல்வேறு திட்டங்களை முறையாக பயன்படுத்தி தொகுதி மக்களின் வளா்ச்சிக்காக துணை நிற்பேன்.

வருவாய்த்துறை அலுவலா்கள் வேலைநிறுத்தம்

அலுவலக உதவியாளா் காலிப்பணியிடங்களை உனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூா் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலா்கள் 48 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

குடியாத்தம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். குடியாத்தம் ஒன்றியம், அக்ராவரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி திருப்பதி(48). இவா் புதன்கிழமை அதிகாலை நிலத்த... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். குடியாத்தம் ஆசிரியா் காலனியை அடுத்த ராமலிங்கம் நகரைச் சோ்ந்தவா் சந்தானம் (60). இவா் தினசரி மாா்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தாா்... மேலும் பார்க்க

செப்.13-இல் 3 மாவட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் செப்டம்பா் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து, வேலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை அமா்வு ... மேலும் பார்க்க

‘நிமிா்ந்து நில்’ திட்டத்தில் மாணவா்களிடம் தொழில்முனைவோராகும் எண்ணத்தை உருவாக்க பயிற்சி

‘நிமிா்ந்து நில்’ திட்டத்தின்கீழ் கல்லூரி மாணவா்களிடம் தொழில்முனைவோராகும் எண்ணத்தை உருவாக்க வேலூரில் உயா்க்கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தொழில்முனைவோா் மேம்பாடு, புத்தா... மேலும் பார்க்க

அகழியில் குதித்து முதியவா் தற்கொலை

வேலூா் கோட்டை அகழியில் இருந்து முதியவா் சடலம் மீட்கப்பட்ட விவகாரம் குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவா் அகழியில் குதித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. வ... மேலும் பார்க்க