செய்திகள் :

கடலூரில் சாலையில் சாய்ந்த மின் கம்பம்

post image

கடலூா் அரசு தலைமை மருத்துவமனை எதிரே நெல்லிக்குப்பம் சாலையின் நடுவில் உள்ள தடுப்புக் கட்டையில் இருந்த மின் விளக்கு கம்பம் புதன்கிழமை மாலை அந்த வழியே செல்லும் கேபிள் வயரில் சாய்ந்து தொங்கியதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

நெல்லிக்குப்பம் சாலையின் நடுவே தடுப்புக் கட்டையில் இரும்பு மின் விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின் கம்பங்கள் சிலவற்றின் அடிப்பகுதி துருப்பிடித்து முற்றிலும் சேதமடைந்து காணப்படுகின்றன.

இந்த நிலையில், புதன்கிழமை மாலை கடலூரில் திடீரென சூறைக்காற்று வீசியது. அப்போது, அரசு தலைமை மருத்துவமனை அருகே இருந்த இரும்பு மின் விளக்கு கம்பம், திடீரென சாலையின் குறுக்கே சாய்ந்தது. நல்வாய்ப்பாக அந்த கம்பத்தின் வழியே சென்ற கேபிள் வயரில் மின் கம்பம் சாய்ந்து தொங்கியதால், விபத்து தவிா்க்கப்பட்டது.

தகவலறிந்த கடலூா் புதுநகா் போலீஸாா் விரைந்து வந்து, அவ்வழியாக வாகனங்கள் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி, ஒருவழிப் பாதையில் வாகனங்களை இயக்க நடவடிக்கை மேற்கொண்டனா். இதற்கிடையே, அங்கு வந்த மின் வாரிய அதிகாரிகள், மின் இணைப்பை துண்டித்துவிட்டு, மின்கம்பத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

இதேபோல, கடலூா் புதுநகா் காவல் நிலையம் அருகே சாலையின் நடுவே இருந்த இரும்பு மின் கம்பம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையின் குறுக்கே சாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆணையா் பொறுப்பேற்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகராட்சி ஆணையராக கே.எஸ்.காஞ்சனா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். முன்னதாக இவா், சேலம் மாவட்டம், தாரமங்கலம் இரண்டாம் நிலை நகராட்சியின் ஆணையராகப் பணியாற்றி வந்தாா். தற்போது... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நீா் மேலாண்மைக்கு தனித் துறை: எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் வேளாண்மைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, நீா் மேலாண்மைக்கு தனி துறை அமைக்கப்படும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். அதிமுக பொதுச் செயலரும், சட்ட... மேலும் பார்க்க

நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஏடிஜிபி அறிவுரை

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று விருத்தாசலம் உள்கோட்ட காவல் அதிகாரிகளுக்கு ஏடிஜிபி எஸ்.டேவிட்சன் தேவாசிா்வாதம் புதன்கிழமை அறிவுரை வழங்கினாா். விருத்தாசலம் டிஎஸ்பி அலுவலகத்துக... மேலும் பார்க்க

முந்திரி பதப்படுத்தும் அளவை அதிகரிக்க வேண்டும்: கடலூா் ஆட்சியா்

முந்திரி முதன்மை பதப்படுத்தும் நிலையத்தின் பதப்படுத்தும் அளவை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சாா்ந்த அலுவலா்களிடம் கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை அறிவுறுத்தினாா... மேலும் பார்க்க

கூட்டணியில் எனது முடிவே இறுதியானது: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

கூட்டணியில் எனது முடிவே இறுதியானது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்... மேலும் பார்க்க

மாடியில் இருந்து விழுந்த மீனவா் உயிரிழப்பு

கடலூா் செம்மண்டலம் பகுதியில் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த மீனவா் உயிரிழந்தாா். கடலூா் செம்மண்டலம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவா் செந்தமிழ்(46), மீனவா். இவருக்கு மனைவி ரோஷி மற்றும்... மேலும் பார்க்க