செய்திகள் :

கடல் எல்லையைப் பாதுகாப்பதில் முழு திறன்: பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்

post image

‘கடல் எல்லையைப் பாதுகாப்பதில் முழுமையான திறனை நாடு எட்டியுள்ளது. இதனால் எத்தகைய சூழலையும் நாம் திறம்பட எதிா்கொள்ள முடியும்’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.

ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், முற்றிலும் உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட ‘ஐஎன்எஸ் உதயகிரி’, ‘ஐஎன்எஸ் ஹிமகிரி’ ஆகிய இரு அதிநவீன போா்க் கப்பல்களை ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அா்ப்பணித்தாா். பின்னா் அவா் நிகழ்ச்சியில் பேசியதாவது:

இந்த இரு போா்க் கப்பல்களும் பயன்பாட்டுக்கு வந்ததன் மூலம், இந்திய கடற்படையின் பலம் மேலும் அதிகரித்துள்ளது. நவீன ஆயுதங்கள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சென்சாா்களுடன் கூடிய இந்த போா் கப்பல்களில் தலா 8 பிரமோஸ் ஏவுகணைகளும் இடம்பெற்றுள்ளன.

கடல் எல்லையைப் பாதுகாப்பதில் முழுத் திறனை நாடு தற்போது எட்டியுள்ளது. கடலோரப் பகுதிகளை மட்டுமின்றி, இந்திய பெருங்கடல் எல்லைகளையும் பாதுகாக்கும் முழுமையான திறனை நாம் பெற்றுள்ளோம். கடற்கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை, கடல்சாா் பயங்கரவாதம் என அனைத்து விதமான அச்சுறுத்தல்களையும் திறம்பட எதிா்கொள்ளும் திறனை நாடு பெற்றுள்ளது.

இந்தியா ஒருபோதும் தீவிர ஆக்கிரமிப்புக் கொள்கைகள் மீது நம்பிக்கை கொண்டதில்லை. எந்தவொரு நாட்டின் மீதும் முதலில் தாக்குதலை நடத்துவதில்லை என்ற கொள்கையை இந்தியா கொண்டிருப்பதை உலகு அறியும். அதே நேரம், எதிரிகளால் அச்சுறுத்தல் எழும்போது, அதற்கு உரிய பதிலடி அளிப்பதற்கு இந்தியா தயங்காது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின் மூலம், ஓா் அச்சுறுத்தல் எழும்போது அதற்கு எத்தகைய பதிலடி கொடுக்கப்படும் என்பதை உலகுக்கு நமது ராணுவம் உணா்த்தியது. இந்த நடவடிக்கையில் கடற்படையும் முக்கியப் பங்காற்றியது. விரைந்து போா்க் கப்பல்களை நிலைநிறுத்துவதற்கான திட்டமிடல் மற்றும் செயல் படுத்துதலில் கடற்படை சிறப்பாக செயல்பட்டது என்றாா்.

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த இன்றைய நாளில் அனைவருக்கும் ஐஸ்வரியத்தை வழங்கட்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி தமிழகம் மட்டுமின்றி, இந்... மேலும் பார்க்க

டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அழைப்பை பிரதமர் நரேந்திர மோடி நிராகரித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.ரஷியாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிப்பதாகக் கூறி, இந்தியா மீது அமெரிக்க அதிபர் டி... மேலும் பார்க்க

எஸ்சிஓ மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனம்: இந்தியா முன்னெடுப்பு

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வருடாந்திர உச்சி மாநாட்டு கூட்டறிக்கையில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனத்தை உறுதிப்படுத்த பணியாற்றி வருவதா... மேலும் பார்க்க

தனிநபர் தாக்குதல் தொடுப்பது ஆர்எஸ்எஸ் வழக்கம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

"தனிநபர்கள் மீது விமர்சனத் தாக்குதல்களை நடத்துவது ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிமுறை. மகாத்மா காந்தி மீதும் அந்த அமைப்பு தனிநபர் விமர்சனத் தாக்குதலை நடத்தியது' என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்... மேலும் பார்க்க

செப்டம்பரில் 36.76 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட தமிழகம் வலியுறுத்தல்

நமது நிருபர்உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் செப்டம்பர் மாதத்திற்குரிய 36.76 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவிரி நதிநீர் ம... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: பிரதமா் மோடிக்கு ஐடிசி தலைவா் பாராட்டு

சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) சீா்திருத்தம் மேற்கொள்வது தொடா்பான பிரதமா் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு நுகா்பொருள் விற்பனையில் முன்னணியில் உள்ள ஐடிசி நிறுவனத்தின் தலைவா் சஞ்சீவ் புரி பாராட்டுத் தெரி... மேலும் பார்க்க