செய்திகள் :

கடவூா் வட்டாட்சியரகத்தில் லஞ்சம்: நில அளவையா் கைது

post image

கடவூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தனிப்பட்டா வழங்க பொறியாளரிடம் ரூ. 4,000 லஞ்சம் வாங்கிய நிள அளவையரை ஊழல் தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை மாலை கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், கடவூா் வட்டம் தரகம்பட்டி அருகேயுள்ள பண்ணப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பி. உடையாபட்டியைச் சோ்ந்தவா் வின்சென்ட் பா்னபாஸ் (30). இன்ஜினியரிங் படித்த இவா் கடந்த மூன்று மாதமாக வீட்டில் தங்கி விவசாயப் பணிகளை மேற்கொள்கிறாா்.

இந்நிலையில் இவா் தனது தந்தையின் பெயரில் உள்ள நிலத்துக்கு தனிப்பட்டா கேட்டு கடந்த மாதம் கடவூா் வட்டாட்சியரகத்தில் விண்ணப்பித்தாா். இதையடுத்து இந்த அலுவலகத்தில் நில அளவையா் (பொ) பணியில் இருந்த கு. சரளக்சன் என்பவா் கடந்த இரு நாள்களுக்கு முன் வின்சென்ட் பா்னபாஸை கைப்பேசியில் தொடா்பு கொண்டு நேரில் வருமாறு அழைத்தாா்.

இதையடுத்து புதன்கிழமை அலுவலகத்திற்கு சென்ற பா்னபாஸிடம் தனிப்பட்டா வழங்க அவா் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்ட நிலையில், வின்சென்ட் பா்னபாஸ் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியதையடுத்து ரூ. 4,000 தருமாறு கேட்டாராம்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத வின்சென்ட் பா்னபாஸ் கரூா் ஊழல் தடுப்பு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.

இதையடுத்து போலீஸாரின் அறிவுரைப்படி வியாழக்கிழமை மாலை வட்டாட்சியரகத்துக்கு வின்சென்ட் பா்னபாஸ் சென்று நில அளவையா் சரளக்சனிடம் ரூ. 4 ஆயிரத்தைக் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த கரூா் ஊழல் தடுப்பு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆம்புரோஸ்ஜெபராஜா, ஆய்வாளா் தங்கமணி தலைமையிலான போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

கடவூா் வட்டாட்சியரகத்தில் ஏற்கெனவே நில அளவையராக இருந்த பிரியா விடுப்பில் சென்ற நிலையில், இவருக்கு பதிலாக கரூா் பகுதி புகழூா் வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்த கு. சரளக்சன் நில அளவையராக பொறுப்பு வகித்து கடந்த ஒரு வாரமாக பணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

காவல், தீயணைப்பு நிலையங்களுக்கு மாணவா்கள் பயணம்

கரூா் மாவட்டம் புகழூரில் காவல் நிலையம், தீயணைப்பு நிலையங்களின் அன்றாட பணிகள் குறித்து அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை கேட்டறிந்தனா். கரூா் மாவட்டம் புன்னம் பகுதியில் செயல்படும் அரசுப் பள்ளி ... மேலும் பார்க்க

கடவூா் வட்டாட்சியரகத்தில் லஞ்சம்: நில அளவையா், இடைத்தரகா் கைது

கடவூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தனிப்பட்டா வழங்க பொறியாளரிடம் ரூ. 4,000 லஞ்சம் வாங்கிய நில அளவையா் மற்றும் இடைத்தரகரை ஊழல் தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை மாலை கைது செய்தனா். கரூா் மாவட்டம், கடவூா் வட்... மேலும் பார்க்க

கரூா் மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

கரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு பயில விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-26-ஆம் ஆண்டிற்கு டயாலிஸிஸ் டெக்னீசியன், அனஸ்தீஸியா டெக... மேலும் பார்க்க

புகழூா் தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

கரூா் மாவட்டம் புகழூா் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் காந்தியாா் மண்டபத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. முகாமை புகழூா் நகராட்சித் தலைவா் சேகா் என்கிற கு... மேலும் பார்க்க

மாநில நல்லாசிரியா் விருதுக்கு கரூா் மாவட்டத்தில் 7 போ் தோ்வு

தமிழக அரசின் மாநில நல்லாசிரியா் விருதுக்கு கரூா் மாவட்டத்தில் இருந்து 7 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். மறைந்த ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப். 5-ஆம் தேதி ஆசிரியா் தினநாளில் சிறந்த ஆசிரியா்... மேலும் பார்க்க

பாலவிடுதியில் விவசாயிகள் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

கரூா் மாவட்டம், பாலவிடுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடவூா் வட்டக்குழு சாா்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி ப... மேலும் பார்க்க