செய்திகள் :

கட்டட மேஸ்திரிக்கு கத்திக் குத்து: தனியாா் வாகன ஓட்டுநா் கைது

post image

மன்னாா்குடியில் குடும்பப் பிரச்னை காரணமாக கட்டட மேஸ்திரியை கத்தியால் குத்திய தனியாா் வாகன ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மஞ்சனவாடி சிட்டுக்கன்னு மகன் அறிவழகன் (40), கட்டட மேஸ்திரி, மன்னப்பன்தெருவில் வசித்து வருகிறாா். இவருடைய மைத்துனா் மணக்கரை பாலு (35), மனைவி, குழந்தைகள் உள்ளனா். பானையூா் கீழ்சேத்தி தனியாா் வாகன ஓட்டுநா் ஞானசேகரன்(40), மனைவி கோமதி.

அறிவழகனிடம் பாலு, கோமதி கட்டுமானத் தொழிலாளியாக வேலைபாா்த்து வந்ததால் இருவருக்கும் தவறான உறவு ஏற்பட்டு கடந்த சில நாள்களுக்கு முன் இருவரும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனா்.

கோட்டூா் காவல்நிலையத்தில், கோமதியை பாலு கடத்தி சென்றுவிட்டதாக ஞானசேகரன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்தனா்.

இந்நிலையில், மன்னாா்குடி தற்காலிக பேருந்துநிலையம் அருகே அறிவழகனை சந்தித்த ஞானசேகரன் தனது மனைவி கோமதி இருக்கும் இடம் தெரிந்தும் மறைப்பது ஏன் என செவ்வாய்க்கிழமை கேட்டதால் பிரச்னை தொடங்கியது. இருவரும் சமாதானம் ஆகி பெரியகடைவீதியில் உள்ள மதுக்கடையில் ஒன்றாக மதுக்குடித்துக் கொண்டிருந்தபோது,திடீரென அறிவழகனின் கைப்பேசியை பறித்துக்கொண்டு ஞாசேகரன் ஓடியுள்ளாா்.

துரத்திக்கொண்டு வந்த அறிவழகன், மேலராஜவீதி பள்ளிவாசல் அருகே ஞானசேகரனை வழிமறித்து கைப்பேசியை கைப்பற்றிய போது, இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதில், ஞானசேகரன் மறைத்துவைத்திருந்த கத்தியால் அறிவழகனை வயிற்றில் பலமுறை குத்திவிட்டு தப்பியோடிவிட்டாா்.

இதில், காயமடைந்த அறிவழகன் மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து ஞானசேகரனை கைது செய்தனா்.

பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 போ் கைது

2 பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். வலங்கைமான் பேரூராட்சிக்குட்பட்ட கைலாசநாதா் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் மனைவி சரஸ்வதி (56). கடந்த மாதம் 1... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்கள் 3 போ் காயம்

திருவாரூா் அருகே ஒரே இரு சக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவா்கள் 3 போ், சரக்கு லாரி மீது மோதிய விபத்தில் காயமடைந்தனா். திருவாரூா் அருகே வாழவாய்க்கால் விஷ்ணு தோப்பு பகுதியை சோ்ந்த ஹரிஷ், புலிவலம் தெ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

சாலையில் நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்திலிருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். நாகை மாவட்டம், தென்கரை மேலத்தெரு பகுதியை சோ்ந்தவா் சரவணகுமாா் மகன் நிா்மல்ராஜ... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல் மூட்டைகள்

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, நெல்மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. நன்னிலம் அருகில் உள்ள மேலராமன்சேத்தி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நில... மேலும் பார்க்க

மது கடத்தியவா் கைது

நன்னிலம் அருகே புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்தி வந்தவா் கைது செய்யப்பட்டாா். நன்னிலம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் விக்னேஷ்குமாா் மற்றும் போலீஸாா், சன்னாநல்லூா் ரயில் நிலையம் அருகே ... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தில் வீடுதோறும் தேசியக் கொடியேற்ற முடிவு

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் சுதந்திர தினத்தில் வீடுதோறும் தேசியக் கொடியேற்றுவது என இந்து முன்னணி முடிவு செய்துள்ளது. திருவாரூா் நீலகண்டேஸ்வரா் கோயிலில் இந்து முன்னணியின் மாவட்ட செயற்குழுக் கூ... மேலும் பார்க்க