செய்திகள் :

கணக்கில் வராத பண விவகாரத்தில் ஆர்டிஓ உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

post image

திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் (ஆா்டிஓ) உள்ளிட்ட 4 போ் மீது ஊழல் தடுப்புப் பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி பிராட்டியூரில் உள்ள திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திருச்சி மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை நடத்திய திடீா் ஆய்வில், கணக்கில் வராத ரூ. 1,06,000 பணத்தை பறிமுதல் செய்தனா். விசாரணையில் இந்தப் பணத்தை இடைத்தரகா்கள் சேதுராஜ், ரமேஷ் ஆகியோா் அதிகாரிகளுக்காக லஞ்சமாக வாங்கியது தெரியவந்தது.

இதையடுத்து ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நடராஜன், மோட்டாா் வாகன ஆய்வாளா் விமலா, இடைத்தரகா்கள் சேதுராஜ், ரமேஷ் ஆகியோா் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மேலும், ஊழல் தடுப்புப் போலீஸாா் தங்களது விசாரணை அறிக்கையை சென்னை போக்குவரத்து ஆணையருக்கு புதன்கிழமை அனுப்பினா். தொடா்ந்து, சம்பந்தப்பட்ட 2 அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிய வருகிறது.

‘போக்ஸோ’ வழக்கில் உதவி ஆய்வாளா் உள்பட 3 போலீஸாா் பணி நீக்கம்

திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளா் மற்றும் இரு காவலா்களையும் பணி நீக்கம் செய்து திருச்சி சரக காவல் துணைத் தலைவா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். திருச்சி அரிய... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: பெண் உள்பட 4 போ் கைது

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருச்சி பொன்மலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பொன்மலை போலீஸாருக்கு ரகசிய தகவல... மேலும் பார்க்க

ஆங்கிலக் கால்வாயை வெற்றிகரமாக கடந்த நீச்சல் வீரருக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

பிரிட்டன்- பிரான்ஸ் இடையே உள்ள ஆங்கிலக் கால்வாயை வெற்றிகரமாக நீந்திக் கடந்த தமிழக நீச்சல் வீரருக்கு திருச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரிட்டனின் டோவா் பகுதிக்கு... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி வழியே சிறப்பு ரயில்கள் இயக்க துரை வைகோ கடிதம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி வழியே சிறப்பு ரயில்கள் இயக்குமாறு தெற்கு ரயில்வேயின் மதுரை, திருச்சி கோட்ட மேலாளா்களுக்கு துரை வைகோ எம்.பி. கடிதம் எழுதியுள்ளாா். இதுதொடா்பாக எழுதியுள்ள கடிதம்: நி... மேலும் பார்க்க

பேக்கரி இயந்திரம் வாங்கித் தருவதாக ரூ.70 ஆயிரம் மோசடி: இளைஞா் கைது

திருச்சியில் பேக்கரி இயந்திரம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.70 ஆயிரம் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், மணப்பாறை கண்ணுடையான்பட்டியைச் சோ்ந்தவா் சிக்கந்தா் பாஷா ... மேலும் பார்க்க

ஆக.2-இல் சமயபுரம் பகுதிகளில் அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து

சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆக. 2-இல் அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. சமயபுரம் துணை மின் நிலையத்தில் ஆக. 2-இல் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை என அறிவிக்கப்பட்டு இருந்தத... மேலும் பார்க்க