செய்திகள் :

கணவன் வாங்கிய ரூ.25000 கடனுக்காக மகனை அடமானம் வைத்த தாய்; மீட்க வந்தபோது புதைக்கபட்டிருந்த மகன்..

post image

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் வாத்து உரிமையாளரிடம் சென்சையாவும், அவரது மனைவி அனகம்மா ஆகியோர் தங்களது மூன்று மகன்களுடன் வாத்து மேய்த்து வந்துள்ளனர்.

சென்சையா தான் வேலை செய்த வாத்து உரிமையாளரிடம் ரூ.25 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். அக்கடனை திரும்ப கொடுக்கும் முன்பு இறந்து போனார். சென்சையா வாங்கிய கடனுக்காக அனகம்மா தனது மகனுடன் சேர்ந்து கொத்தடிமையாக வேலை செய்து வந்தார்.

தினமும் அதிக நேரம் வேலை செய்யும்படி நிர்பந்திக்கப்பட்டு, குறைவான சம்பளம் கொடுக்கப்பட்டதால், வேலையை விட்டு செல்வதாக அனகம்மா தெரிவித்தார்.

சென்சையா வாங்கிய ரூ.25 ஆயிரத்தை வட்டியுடன் சேர்த்து, ரூ.45 ஆயிரமாக கொடுத்து விட்டு செல்லுமாறு வாத்து உரிமையாளர் கூறியுள்ளார்.

பணத்தை ஏற்பாடு செய்ய 10 நாள் அவகாசம் கேட்ட பெண்ணிடம், ஒரு மகனை அடமானமாக வைத்து விட்டு போ" என்று வாத்து உரிமையாளர் மிரட்டியுள்ளார்.

அனகம்மா வேறு வழியில்லாமல் ஒரு மகனை விட்டுவிட்டு மற்ற இரு குழந்தைகளை அழைத்துச் சென்றார். பணம் ஏற்பாடு செய்ய சென்ற அனகம்மா அடிக்கடி தனது மகனுடன் போன் செய்து பேசிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு முறையும் போனில் பேசும்போது தன்னை வந்து அழைத்து செல்லும்படி மகன் கேட்டுக்கொண்டார்.

கடந்த மாதம் அனகம்மா வாத்து உரிமையாளரை தொடர்பு கொண்டு பணத்தை ஏற்பாடு செய்துவிட்டதாகவும், மகனை அழைத்து செல்ல வருவதாக குறிப்பிட்டார்.

வாத்து உரிமையாளர், மகனை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மருத்துவமனையில் தனது மகனை பார்க்கவேண்டும் என்று சொன்னபோது வாத்து பண்ணையில் இருந்து பையன் ஓடிவிட்டதாக வாத்து உரிமையாளர் மாறி மாறி பேசியுள்ளார்.

மகனுக்கு ஏதோ நடந்திருக்கிறது என்று பயந்த அனகம்மா சில பழங்குடியின தலைவர்களின் துணையோடு இது குறித்து போலீஸில் புகார் செய்தார்.

போலீஸார் தனிப்படை அமைத்து வாத்து உரிமையாளரிடம் விசாரித்த போது பையன் இறந்திருப்பது தெரிய வந்தது. பையன் இறந்தவுடன் அவனை காஞ்சிபுரம் அருகே புதைத்திருப்பதாக வாத்து உரிமையாளர் தெரிவித்தார்.

வாத்து பண்ணை பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது பையனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

மேற்கொண்டு விசாரித்த போது பையன் மஞ்சள்காமாலையால் இறந்ததும், அதனை பையனின் தாயாரிடம் தெரிவிக்காமல் ரகசியமாக புதைத்துவிட்டதாகவும் தெரிய வந்தது.

இதையடுத்து வாத்து உரிமையாளர், அவரது மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட பெண் போலீஸ்.. நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது என்ன?

மயிலாடுதுறை மாவட்டம் மணகுடி அருகே உள்ள கீழிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அபிநயா (29). இவர் நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படையில் பெண் போலீஸாக பணியாற்றி வருகிறார். திருமணம் ஆன இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து ... மேலும் பார்க்க

6 மாதத்தில் பிரிந்த மனைவி; திருமண ஏற்பாடு செய்த புரோக்கரை கொடூரமாக கொன்ற கணவன்!

திருமணமாகி 6 மாதத்தில் மனைவி பிரிந்து சென்றதால், பெண் பார்த்து கொடுத்த புரோக்கரை கணவன் கொலை செய்த சம்பவம் மங்களூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகா மாநிலம் மங்களூருவில் வாமஞ்சூர் பகுதி... மேலும் பார்க்க

சென்னை: இன்ஸ்டா பழக்கம்; பள்ளி மாணவியுடன் லாட்ஜில் தங்கிய இளைஞர் கைதான பின்னணி!

ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குட்பட்ட பகுதியில் தாத்தா, பாட்டியுடன் வசிக்கும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி, திடீரென மாயமனார். அவரைக் கண்டுபிடித்து தரும்படி மாணவி தரப்பில் ஆவடி காவல் நிலையத்தில் புக... மேலும் பார்க்க

`பேன்ட் அளவு சரியில்லை' - டெய்லரை கத்தரிகோலால் குத்திக் கொன்ற இளைஞர்... குமரி `பகீர்'

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி, திட்டுவிளை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம்(65). இவர் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் பெண்களுக்கான தையலகம் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன் தினம... மேலும் பார்க்க

போதையில் தகராறு; அண்ணனை கொன்ற தம்பி போலீஸில் சரண் - மதுவால் நடந்த விபரீதம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி அரசமர தெருவைச் சேர்ந்த ராஜா இவரது மகன்கள் அஜித்குமார் (27) டிப்ளமோ படித்துள்ளார். ராம்குமார் (25) டூ விலர் மெக்கானிக். ராஜா சில ஆண்டுகளுக்கு முன்பு... மேலும் பார்க்க

படித்தது பிளஸ் 2; 18 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை -திருப்பரில் கைது செய்யப்பட்ட போலி மருத்துவர்!

திருப்பூர் முருகம்பாளையம் கிராமத்தில் சூர்யா கிருஷ்ணா நகர் 1-ஆவது வீதியில் ஹிமாலயா பார்மசி என்ற மருந்துக் கடை இயங்கி வருகிறது. ஜோலி அகஸ்டின் என்பவர் இந்த மருந்துக் கடையை நடத்தி வருகிறார். கேரளத்தைச் ச... மேலும் பார்க்க