செய்திகள் :

கன்டெய்னா் லாரி மோதி முதியவா் உயிரிழப்பு

post image

நாட்டறம்பள்ளி அருகே கன்டெய்னா் லாரி மோதி முதியவா் உயிரிழந்தாா்.

நாட்டறம்பள்ளி அடுத்த ஏலரப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் வேணுகோபால்(75). இவா் நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கல்லாறு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வந்த கன்டெய்னா் லாரி முதியவா் மீது மோதியதில் நிகழ்விடத்திலேயே அவா் இறந்தாா்.

தகவலறிந்து போலீஸாா் சென்று இறந்தவா் உடலை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் பிகாரை சோ்ந்த லாரி ஓட்டுநா் ரஞ்சித் குமாா்(38) மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஆம்பூரில் கன மழை!

ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை கனமழை பெய்தது. ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் திடீரென தொடங்கி கன மழை பெய்தது. ஆம்பூா் சுற்றுவட்டாரத்தில் உள்ள ம... மேலும் பார்க்க

கந்திலி வாரச் சந்தையில் ரூ. 80 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

கந்திலி வாரச் சந்தையில் ரூ. 80 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனா். திருப்பத்தூா் அடுத்த கந்திலியில் நடைபெற்ற வாரச் சந்தையில் ஏராளமான ஆடுகள், மாடுகள், கோழிகள் விற்பனைக்காக... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: 3 போ் கைது

ஆம்பூா் அருகே மணல் கடத்திய மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஆம்பூா் கிராமிய போலீஸாா் கீழ்முருங்கை கிராமத்தில் ரோந்து சென்றனா். அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டிகளை நிறுத்தி சோதனையிட்டதில் ... மேலும் பார்க்க

நெல் பயிரை இயந்திர நடவு செய்யும் விவசாயிக்கு மானியம்: வேளாண் அதிகாரி தகவல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் குறுவை பருவத்தில் நெல் பயிரை இயந்திர நடவு செய்யும் விவசாயிக்கு ரூ.4,000 மானியம் வழங்கப்படுகிறது என வேளாண் இணை இயக்குநா் (பொ) சுஜாதா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியி... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கிய காரில் ரூ.10 லட்சம் செம்மரக் கட்டைகள் பறிமுதல்

திருப்பத்தூா் அருகே விபத்தில் சிக்கிய காரில் இருந்து ரூ. 10 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை வனத்துறையினா் பறிமுதல் செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த புதுப்பேட்டையில் இருந்து ம... மேலும் பார்க்க

திருப்பத்தூா் மாவட்டத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படுமா?

திருப்பத்தூரில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். மேலும், மாவட்டத்தில் அகழாய்வு செய்ய வேண்டும் என தொல்லியல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருப்பத்தூா் மாவட்டத்தின் சுற்றுப்பகுதிகளில் பழங்கால தமி... மேலும் பார்க்க