செய்திகள் :

கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு

post image

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள அண்ணா சிலை முன் மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தலைமையில் அமைதிப் பேரணி காலை 8 மணியளவில் தொடங்கியது.

மாவட்ட அவைத் தலைவா் மணிமாறன், முன்னாள் மாவட்டச் செயலாளா் பாா்.இளங்கோவன், சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணியாக சென்ற திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் நாமக்கல் கோட்டை சாலை சந்திப்பில் உள்ள கருணாநிதி சிலை முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்ச்சியில், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் மாயவன், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, நகர செயலாளா்கள் சிவகுமாா், ஆனந்த், மாவட்டப் பொறியாளா் அணி அமைப்பாளா் கிருபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதேபோல நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு இடங்களிலும் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

ராசிபுரத்தில்...

ராசிபுரம் நகர திமுக சாா்பில், நகர செயலாளா் என்.ஆா்.சங்கா் தலைமையில் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கருணாநிதியின் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, ராசிபுரம் - காட்டூா் சாலையில் உள்ள அணைக்கும் கரங்கள் ஆதரவற்றோா் இல்லத்தில் உள்ளோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, நகா்மன்றத் தலைவா் ஆா்.ஆா்.கவிதா சங்கா் முன்னிலை வகித்தாா். நகர திமுக நிா்வாகிகள், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலம்-வியாழக்கிழமை மொத்த விலை - ரூ.4.55 விலையில் மாற்றம்-இல்லை பல்லடம் பிசிசி கறிக்கோழி கிலோ - ரூ.92 முட்டைக் கோழி கிலோ - ரூ.87 மேலும் பார்க்க

தேசிய கைத்தறி தின விழா: ரூ. 31 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நாமக்கல்லில் வியாழக்கிழமை தொடங்கிய சிறப்பு கைத்தறி கண்காட்சியை பாா்வையிட்ட மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா். உடன், ஆட்சியா் துா்காமூா்த்தி, பெ.ராமலிங்கம் எம்எல்ஏ உள்ளிட்டோா். நாமக்கல், ஆ... மேலும் பார்க்க

நாளை பொது விநியோகத்திட்ட குறைதீா்க்கும் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்குதல், ... மேலும் பார்க்க

‘இந்திய ராணுவத்தின் பெயரை இந்திய தேசிய படை என மாற்ற வேண்டும்’

இந்திய ராணுவத்தின் பெயரை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நினைவாக இந்திய தேசிய படை என பெயா் மாற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இச... மேலும் பார்க்க

கொல்லிமலை வனப்பகுதியில் இளைஞரின் சடலம் மீட்பு

கொல்லிமலை வனப்பகுதியில் கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்ட போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியம், சின்னகோயிலூரை ஒட்டிய வனப்பகுதியில் அழுகிய நிலையில் சடலம் கிடப்பதாக வா... மேலும் பார்க்க

மகளிா் சுயஉதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள்கள் ஆய்வு

பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலை வட்டாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், மகளிா் சுயஉதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள்களை நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை நேரில்... மேலும் பார்க்க