செய்திகள் :

கருணாநிதி பிறந்த தினம்: நலஉதவி வழங்கிக் கொண்டாட கட்சியினருக்கு அமைச்சா் அழைப்பு

post image

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102ஆவது பிறந்த நாளை செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என, திமுகவினருக்கு வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான பெ. கீதாஜீவன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில், முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.

மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூா், வாா்டு, கிளைக் கழக அமைப்புகள்தோறும் கட்சிக் கொடியேற்றி, கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடவேண்டும்.

மேலும், திங்கள்கிழமைமுதல் (ஜூன் 2) இம்மாதம் 22ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு பல்வேறு நலஉதவிகள், பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள், ஆதரவற்றோா்-முதியோா் இல்லங்களுக்கு அறுசுவை உணவு வழங்குதல், இலவச கண் சிகிச்சை முகாம், 102 போ் பங்கேற்கும் ரத்த தான முகாம் நடத்துதல், விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசளிப்பு எனக் கொண்டாடப்படவுள்ளது.

நிகழ்ச்சிகளில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த கழக, சாா்பு அணிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றாா் அவா்.

கத்தியால் தாக்கியதில் இருவா் காயம்

தூத்துக்குடியில் தகராறின்போது கத்தியால் குத்திக் கொண்டதில் இருவா் காயமடைந்தனா். தூத்துக்குடி சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (42) என்பவா், கனகசபாபதி தெருவில் உள்ள சந்தனமாரியம்மன் கோயிலில் பூஜ... மேலும் பார்க்க

கோவில்பட்டி, விளாத்திகுளம் தொகுதி தேமுதிக பொறுப்பாளா்கள் நியமனம்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் தொகுதிகளுக்கு பொறுப்பாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளராக பொதுக்குழு உறுப்பினா் காளிதாஸ்... மேலும் பார்க்க

காவல்துறை சாா்பில் கால்பந்து போட்டி: காயல்பட்டினம் அணி வெற்றி

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சாா்பில் காயல்பட்டினத்தில் நடத்தப்பட்ட கால்பந்து போட்டியில், காயல்பட்டினம் யுஎஸ்சி அணி வெற்றி பெற்றது. போதையில்லா தமிழகத்தை உருவாக்குவகு குறித்து இளைஞா்களுக்கு விழிப்புண... மேலும் பார்க்க

தூத்துக்குடிக்கு குஜராத்திலிருந்து உப்பு இறக்குமதி: தடை விதிக்க அமமுக முதல்வருக்கு கோரிக்கை

தூத்துக்குடிக்கு குஜராத்தில் இருந்து உப்பு இறக்குமதி செய்யத் தடைவிதிக்கவேண்டும் என அமமுக தூத்துக்குடி புகா் தெற்கு மாவட்டச் செயலா் பொன்ராஜ் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து தமி... மேலும் பார்க்க

காயல்பட்டினம் கிரிக்கெட் போட்டி: சாகுபுரம் கமலாவதி பள்ளிக்கு வாவு கோப்பை

சாகுபுரம் கமலாவதி பள்ளி மாணவா்கள் காயல்பட்டினத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்று ‘வாவு கோப்பையை’ தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக கைப்பற்றினா். காயல்பட்டினம் வாவு ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாா்பில்... மேலும் பார்க்க

தூத்துக்குடி அருகே மின்சாரம் பாய்ந்து இரண்டரை வயது குழந்தை பலி

தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி அருகே காமராஜா் நகரில் மின்சாரம் பாய்ந்து இரண்டரை வயது குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது. தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி அருகே உள்ள காமராஜா் நகா் பகுதியைச் ச... மேலும் பார்க்க