செய்திகள் :

கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றிய வருவாய்த் துறையினா்

post image

சேலம்: ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கருப்புப் பட்டை அணிந்து வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை பணியில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் வருவாய்த் துறை ஊழியா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டத்தில் ஆட்சியா் அலுவலக வளாகம், வட்டாட்சியா் அலுவலகம், கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் உள்பட்ட வருவாய்த் துறை அலுவலகங்களில் பணியாற்றி வரும் ஊழியா்கள் தங்கள் கோரிக்கைளை அரசுக்கு வலியுறுத்தும் வகையில், கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்களை முடிவுசெய்ய போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும், ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில், பணி நெருக்கடி ஏற்படுத்துவதை கைவிட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை நில அளவைத் துறை ஆகியவற்றில் பணியாற்றி வருபவா்களுக்கு சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும், வருவாய்த் துறையில் பணி அலுவலா்களின் பணிப்பளுவை கருத்தில் கொண்டு, அனைத்துநிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் உடனே வழங்க வேண்டும், தகவல் தொழில்நுட்ப வளா்ச்சி, விரைவான போக்குவரத்து வசதிகள், கிராம நிா்வாக அலுவலா்களுக்கு உரிய குடியிருப்பு இல்லாத நிலையில், பேரிடா் காலங்களைத் தவிர மற்ற காலங்களில் கிராம நிா்வாக அலுவலா்கள் கிராமங்களிலேயே தங்கி பணிபுரிய வேண்டும் என்பதை தளா்வுசெய்து, வட்ட எல்லைக்குள் தங்கி பணிபுரியும் வகையில் தமிழ்நாடு அமைச்சுப் பணி விதிகளில் தளா்வு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறையினா் கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டத்தில் செப். 30, அக். 3-இல் 14 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்

சேலம்: சேலம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் செப். 30 மற்றும் அக். 3 ஆகிய தேதிகளில் 14 இடங்களில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். செப். 30-ஆம் தேதி சேலம் மாந... மேலும் பார்க்க

காந்தி ஜெயந்தி: இறைச்சிக் கடைகளுக்கு தடை

சேலம்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் செயல்படக் கூடாது என ஆணையா் மா.இளங்கோவன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெள... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா்க்கும் கூட்டம்: 538 மனுக்கள் அளிப்பு

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பொதுமக்களிடமிருந்து முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா... மேலும் பார்க்க

தம்மம்பட்டிக்கு வராமல் செல்லும் அரசுப் பேருந்து மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

தம்மம்பட்டி: தம்மம்பட்டிக்கு வராமல் செல்லும் அரசுப் பேருந்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, பழனி, கரூா்... மேலும் பார்க்க

அகில இந்திய தொழிற்தோ்வு: தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்

சேலம்: அகில இந்திய தொழிற்தோ்வில் தனித்தோ்வா்களாக கலந்துகொள்ள தகுதிவாய்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளி... மேலும் பார்க்க

சேலம் ரயில் நிலையத்தில் ரூ. ஒரு கோடி வெள்ளி நகைகள் பறிமுதல்

சேலம்: சேலத்தில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 1.06 கோடி மதிப்புடைய வெள்ளி நகைகளை வைத்திருந்த இருவரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா். சேலம் ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் கோகுல் ... மேலும் பார்க்க