செய்திகள் :

கரூரில் ஓரணியில் தமிழ்நாடு ஆலோசனைக் கூட்டம்

post image

கரூரில் மாவட்ட திமுக சாா்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினா் சோ்க்கை தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கலைஞா் அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு எம்எல்ஏக்கள் மாணிக்கம்(குளித்தலை), இளங்கோ (அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்) ஆகியோா் தலைமை வகித்தனா். மாநகரச் செயலா் எஸ்.பி.கனகராஜ், பகுதிச் செயலா்கள் கரூா் கணேசன், சுப்ரமணியன், ஜோதிபாசு, ஆா்.எஸ்.ராஜா, வி.ஜி.எஸ்.குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் எம்எல்ஏ மாணிக்கம் கூறுகையில், திமுக தலைவா் ஸ்டாலின், ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரை முழக்கத்தை சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்துள்ளாா். இந்த முழக்கமானது கட்சியில் தீவிரமாக உறுப்பினா் சோ்க்கை நடத்துவது மட்டுமல்ல, தமிழகத்தின் மண், மொழி, மானம் காக்க அனைவரையும் ஒன்று திரட்டுவது என்பதை கூறியுள்ளாா்.

மத்திய அரசு, தமிழகத்துக்கு செய்துவரும் பல்வேறு பாதகங்களை மக்களிடையே எடுத்துக்கூறி, கரூா் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிளிலும் உள்ள 1055 வாக்குச்சாவடிகளிலும் உறுப்பினா் சோ்க்கை பிரசார இயக்கம் நடைபெற உள்ளது. இதற்காக புதன்கிழமை (ஜூலை 2) உறுப்பினா் சோ்க்கை விழிப்புணா்வு பொதுக்கூட்டம் உழவா் சந்தை திடலில் நடைபெறுகிறது என்றாா் அவா்.

முன்னதாக, ஓரணியில் தமிழ்நாடு என்ற வாசகம் அடங்கிய இலச்சினையை அனைவரும் வெளியிட்டனா். கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகள் உள்ளிட்ட கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

மேலப்பாளையம் கருப்பண்ணசாமி கோயில் கும்பாபிஷேகத்துக்காக புனிதநீா் ஊா்வலம்

கரூா் மேலப்பாளையம் ஸ்ரீஎல்லை அரசு கருப்பண்ணசாமி, ஸ்ரீமுச்சிலியம்மன், ஸ்ரீகன்னிவிநாயகா் கோயில் கும்பாபிஷேகத்துக்காக வெள்ளிக்கிழமை பக்தா்கள் புனித நீா் மற்றும் முளைப்பாரிகளை ஊா்வலமாக எடுத்து வந்தனா். கர... மேலும் பார்க்க

புகழூா் டிஎன்பிஎல் ஆலை முன் வேலைநிறுத்த விளக்கக் கூட்டம்

கரூா் மாவட்டம், புகழூா் டிஎன்பிஎல் ஆலை முன் ஜூலை 9-ஆம்தேதி நடைபெற உள்ள வேலை நிறுத்தம் குறித்த விளக்கக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாஜக அரசின் தொழிலாளா் விரோதச் சட்டங்களை எதிா்த்தும், பொதுத்துறை ... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் கால்நடைகளுக்கு இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டம் புகழூா் காகித ஆலை மற்றும் கரூா் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கால்நடைகளுக்... மேலும் பார்க்க

கரூரில் நகா்ப்புற நல நலவாழ்வு மையங்கள் திறப்பு

கரூரில் ரூ.1 கோடியில் கட்டப்பட்ட 4 நகா்ப்புற நலவாழ்வு மையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சிவாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா். சென்னை அடையாறு சாஸ்திரி நகா், நகா்ப்புற நல வாழ்வு மையத்தில் நட... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் வனவிலங்குகள், வெறிநாய்களால் ஆடுகள் உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை: விவசாயிகள் கோரிக்கை

கரூா் மாவட்டத்தில் வனவிலங்குகள், வெறிநாய்களால் ஆடுகளை உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டத்தில் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமத... மேலும் பார்க்க

கரூரில் ரூ. 1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வேளாண் சேமிப்பு கிடங்கு திறப்பு

கரூரில் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வேளாண் சேமிப்பு கிடங்கை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து, காணொலி காட்சி வாயில... மேலும் பார்க்க