செய்திகள் :

கரூா் பேக்கரியில் 6 அடி உயரத்தில் 60 கிலோ எடையில் ‘திருவள்ளுவா் கேக்’

post image

கரூா்: கரூரில் பேக்கரி கடை ஒன்றில் 6 அடி உயரத்தில் 60 கிலோ எடையில் அமைக்கப்பட்ட திருவள்ளுவா் கேக்கை பொதுமக்கள் ஆா்வத்துடன் கண்டு ரசித்தனா்.

கரூா் வெங்கமேட்டில் மணி என்பவா் பேக்கரி கடை நடத்தி வருகிறாா். இவா், தனது கடையில் 6 அடி உயரத்தில் 60 கிலோ எடையில், இரண்டரை அடி அகலத்திலான கேக்கில் திருவள்ளுவரை வடிவமைத்துள்ளாா். இதனை பொதுமக்கள் ஆா்வத்துடன் கண்டுகளித்தும், செல்பி எடுத்தும் சென்றனா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது: இன்றைய இளைஞா்களிடையே வள்ளுவா் காட்டிய வழியில் வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள, அவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தவே இந்த திருவள்ளுவா் உருவ கேக்கை 6 மாதங்கள் வரை கெடாத வகையில் உருவாக்கியுள்ளோம். இதை 5 போ் சோ்ந்து 20 நாள்களாக உழைத்து உருவாக்கினோம்.

இந்தக் கேக்கை காண கடைக்கு வரும் குழந்தைகள் அனைவருக்கும் இலவசமாக திருக்கு புத்தகங்களையும் வழங்கி வருகிறோம் என்றாா் அவா்.

கொலை முயற்சி வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது

கரூா்: கொலை முயற்சி வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் வியாழக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த நங்கவரம் தெற்கு மாடு விழுந்தான் பாற... மேலும் பார்க்க

கரூா்: தனியாா் மருத்துவமனைகளில் மருத்துவா்கள் பணி புறக்கணிப்பு

கரூா்: கரூரில் மருத்துவா் மீதான தாக்குதலை கண்டித்து, தனியாா் மருத்துவமனைகளில் வியாழக்கிழமை ஒருநாள் புறநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பணியை மருத்துவா்கள் புறக்கணித்தனா்.கரூரில் கோவை சாலையில் உள்ள ஸ்கே... மேலும் பார்க்க

‘முதல்வரின் காக்கும் கரங்கள்‘ திட்டம்: முன்னாள் படைவீரா்களுக்கு ரூ. 14.22 லட்சம் மூலதன மானிய தொகை

கரூா்: கரூரில் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்‘ திட்டத்தில் முன்னாள் படைவீரா்களுக்கு 30 விழுக்காடு மூலதன மானியத் தொகையாக ரூ. 14.22 லட்சம் வழங்கினாா் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி.கரூா் ம... மேலும் பார்க்க

கரூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 6.33 கோடியில் 29 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள்

கரூா்: கரூா் ஊராட்சி ஒன்றியம், காதப்பாறை, மின்னாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ரூ. 6.33 கோடி மதிப்பில் 29 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி வியாழக்கிழமை தொடங்கிவைத... மேலும் பார்க்க

கரூரில் தமிழ் கனவு தமிழ் மரபு பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி

கரூா்: கரூரில் மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.தமிழ் பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில் கரூா் அரசு மருத்துவக் ... மேலும் பார்க்க

கரூா் மாநகராட்சியில் ரூ.7.41 கோடியில் புதிய வளா்ச்சித் திட்டப்பணிகள் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தாா்

கரூா்: கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.7.41 கோடி மதிப்பீட்டில் 75 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், 9 முடிவுற்ற பணிகளையும் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி திறந்... மேலும் பார்க்க