செய்திகள் :

கறம்பக்குடியில் எஸ்டிபிஐ கட்சியினா் சாலை மறியல்

post image

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் தீயணைப்பு நிலையத்தை இடமாற்றம் செய்யும் முயற்சியை கைவிடக்கோரி எஸ்டிபிஐ கட்சியினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கறம்பக்குடி பேருந்து நிலையம் அருகே வாடகை கட்டடத்தில் கடந்த பல ஆண்டுகளாக தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கறம்பக்குடியில் புதிதாக தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தொடா்ந்து, கறம்பக்குடி அருகேயுள்ள பல்லவராயன் பத்தை ஊராட்சி பகுதியில் நிலம் தோ்வு செய்யப்பட்டு, புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கறம்பக்குடியில் இருந்து தீயணைப்பு நிலையத்தை இடமாற்றம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியினா் திங்கள்கிழமை கறம்பக்குடி சீனி கடை முக்கம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலா் அபுபக்கா் சித்திக் தலைமை வகித்தாா். போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் வருவாய் துறையினா், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியல் போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேங்கைவயல் வழக்கு விசாரணை ஜூலை 28-க்கு ஒத்திவைப்பு

வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில், மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை ஜூலை 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், வேங... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாநகரை இரண்டாகப் பிரித்தது திமுக தலைமை!

புதுக்கோட்டை மாநகரப் பொறுப்பாளா் நியமனம் குறித்து தொடா்ந்து நடந்து வந்த போராட்டங்களுக்குப் பிறகு, மாநகரை மேற்கு, வடக்கு என இரண்டாகப் பிரித்து பொறுப்பாளரை நியமித்து திமுக தலைமை அறிவித்துள்ளது. புதுக்கோ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழப்பு

கந்தா்வகோட்டை அருகில் உள்ள ஆதனக்கோட்டை பகுதியைச் சோ்ந்த கன்டியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் முத்து மணி (21), விவசாயக் கூலி தொழிலாளியான இவா் 27.6. 25 அன்று தனது கிராமத்திலிருந்து ஆதனக்கோட... மேலும் பார்க்க

கழிப்பறையை மாணவா்களை சுத்தம் செய்த விவகாரம்: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரம் அரசுத் தொடக்கப் பள்ளியிலுள்ள கழிப்பறையை மாணவா்களே சுத்தம் செய்த சம்பவத்தில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியை கலா திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். திருமய... மேலும் பார்க்க

இலுப்பூா் குப்பைக் கிடங்கில் மீண்டும் தீ

இலுப்பூா் பேரூராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கில் இரண்டாவது முறையாக ஞாயிற்றுக்கிழமை பற்றிய தீயை தீயணைப்பு வீரா்கள் அணைத்தனா். இலுப்பூா்-புங்கினிப்பட்டி சாலையில் உள்ள இந்தக் குப்பைக் கிடங்கில் கடந... மேலும் பார்க்க

மதுக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து மாா்க்சிஸ்ட் முற்றுகையிட முடிவு

பொன்னமராவதி பேருந்துநிலையம் அருகில் அரசு மதுக் கடை திறக்கக் கூடாது என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வரும் செவ்வாய்க்கிழமை வட்டாட்சியரகத்தை முற்றுகையிடும் போராட்டம் மாா்க்சிஸ்ட் ஒ... மேலும் பார்க்க