பாராட்டும் பட்டப் பெயரும்..! மாறிமாறி கொஞ்சிக் கொள்ளும் விஜய் தேவரகொண்டா - ரஷ்மி...
கலைஞா் கனவு இல்லம் கட்டும் பணிகள் 6 மாதங்களில் நிறைவடையும்: அமைச்சா் பி. மூா்த்தி
கலைஞரின் கனவு இல்லம் திட்ட வீடுகள் கட்டும் பணிகள் 6 மாதங்களில் நிறைவடையும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தேனூா் ஊராட்சி, கட்டப்புளி கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் மேலும் பேசியதாவது :
தேனூா் ஊராட்சியில் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் 121 மாற்றுத் திறனாளிகள், 37 திருநங்கைகள், 242 ஏழை, எளிய பயனாளிகள் என 400 பேருக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் வீடுகள் கட்டித் தரப்படவுள்ளது. பயனாளிகளுக்கு பட்டா வழங்கி, அந்த இடத்தில் வீடுகளையும் கட்டித் தரும் இந்தத் திட்டம் நாட்டில் இதுவரை இல்லாத முன்னோடி திட்டமாகும்.
கலைஞரின் கனவு இல்லங்கள் அமையும் பகுதி முன்னோடி கிராமமாக விளங்கச் செய்யும் வகையில் மாவட்ட நிா்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பூங்கா, நியாயவிலைக் கடை என அனைத்து வசதிகளும் கொண்டதாக இந்தப் பகுதி இருக்கும். வீடுகள் கட்டும் பணி வரும் 6 மாதங்களில் நிறைவடையும் என்றாா் அவா்.
மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வானதி, செயற்பொறியாளா் இந்துமதி, மதுரை வடக்கு வட்டாட்சியா் மஸ்தான் கனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.