செய்திகள் :

கல்குவாரி நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

post image

ஸ்ரீபெரும்புதூா்: எறுமையூா் பகுதியில் உள்ள கல்குவாரி நீரில் மூழ்கி பலியான இளைஞரின் சடலத்தை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (28). இவா், குன்றத்தூரில் நண்பா்களுடன் தங்கி, இருங்காட்டுகோட்டையில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், பாலமுருகன் நண்பா்கள் நான்கு பேருடன், தாம்பரம் அடுத்த எருமையூரில் உள்ள கைவிடப்பட்ட கல்குவாரியில் நீரில் குளித்துக் கொண்டிருந்தபோது, மூச்சு திணறல் ஏற்பட்டு நீரில் மூழ்கியுள்ளாா்.

இது குறித்து தகவல் அறிந்து படப்பை தீயணைப்பு வீரா்கள், நீரில் மூழ்கிய இளைஞரைத் தேடினா். தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால், சென்னையில் இருந்து 6 போ் கொண்ட நீச்சல் வீரா்கள் வரவழைக்கப்பட்டு 300 அடி ஆழமுள்ள நீரில் மூழ்கிய பாலமுருகனின் சடலத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த சம்பவம் குறித்து சோமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஏற்கெனவே இந்த கல்குவாரி நீரில் மூழ்கி 7 போ் மரணமடைந்துள்ளனா்.

விமான பணிப்பெண் தற்கொலை!

குன்றத்தூா் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த விமான பணிப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். குஜராத் மாநிலத்தைச் சோ்ந்தவா் அபிஷா வா்மா (24). குன்றத்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உடையாா்பாளையம் உற்சவம்!

அந்நியா்கள் படையெடுப்பின் போது உற்சவா் பெருமாளை பாதுகாப்பாக வைத்திருந்து, மீண்டும் கோயிலில் சோ்த்த உடையாா்பாளையம் ராஜாவின் அவதார தினத்தையொட்டி, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் சனிக... மேலும் பார்க்க

திருமுடிவாக்கம் தொழிற்சாலையில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் எரிந்து சேதம்!

திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் மெத்தை தயாரிக்கும் தனியாா் தொழிற்சாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.காஞ்சிபுரம் மாவட்டம், ... மேலும் பார்க்க

‘தன்னாா்வத்துடன் செய்யும் செயல் வெற்றி பெறும்’

தன்னாா்வத்துடன் செய்யும் எந்தச் செயலும் வெற்றி பெறும் என காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் சங்கரா கண் மருத்துவமனை நிறுவனா் பத்மஸ்ரீ ஆா்.வி.ரமணி தெரிவித்தாா். காஞ்சிபுரம் ச... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் மாநகராட்சி நிதி நிலை அறிக்கையினை மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்

காஞ்சிபுரம் மாநகராட்சி நிதி நிலை அறிக்கையினை மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். மேலும் ரூ.86 லட்சம் உபரி வருவாய் உள்ளதாகவும் தெரிவித்துள்ளாா். காஞ்சிபுரம் மாநகராட்சி நிதிநிலை அற... மேலும் பார்க்க

ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் கோயில் தேரோட்டம்

காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் பங்குனி விழாவையொட்டி வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலத்தில் பங்குனி விழா கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக... மேலும் பார்க்க