செய்திகள் :

திருமுடிவாக்கம் தொழிற்சாலையில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் எரிந்து சேதம்!

post image

திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் மெத்தை தயாரிக்கும் தனியாா் தொழிற்சாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை இயங்கி வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் இயங்கி வந்த மெத்தைகள் தயாரிக்கும் தனியாா் நிறுவனத்தின் ஒரு பகுதியில் தீப் பிடித்து எரியத் தொடங்கியுள்ளது.

இது குறித்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியா்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, தாம்பரம் மற்றும் பூந்தமல்லி தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்புத் துறையினா் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைத்தனா். எனினும் தொழிற்சாலையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இந்தச் சம்பவம் குறித்து குன்றத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

போதை மாத்திரைகள் விற்ற 6 போ் கைது

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூா் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்த 6 பேரை காவல்துறையினா் கைது செய்து, அவா்களிடமிருந்த ரூ. 17,000 மதிப்புள்ள போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்ட... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் பங்குனித் திருவிழா நிறைவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் பங்குனித் திருவிழா நிறைவு பெற்றதையொட்டி திங்கள்கிழமை ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் யதோக்தகாரி பெருமாள் வெட்டிவோ் சப்பரத்தில் வீதியுலா வந்தாா். சி... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி பெண் வாழ்வாதாரத்துக்கு ஆட்டோ

ஸ்ரீபெரும்புதூா்: போலீஸாரின் அறிவுரையை ஏற்று கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யாமல், தற்போது திருந்தி வாழும் பெண் மாற்றுத்திறனாளியின் மறுவாழ்வுக்காக ஆட்டோ வாங்கி தந்துள்ளாா் மணிமங்கலம் காவல்... மேலும் பார்க்க

பச்சையப்ப முதலியாா் நினைவு தினம் அனுசரிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் மகளிா் கல்லூரியில் கல்விக் கொடை வள்ளல் பச்சையப்ப முதலியாரின் 231-ஆவது நினைவு தினத்தையொட்டி, திங்கள்கிழமை அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செல... மேலும் பார்க்க

உகாதி பண்டிகை: காஞ்சி வரதா் வீதி உலா

உகாதி பண்டிகையையொட்டி ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் வரதராஜ சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அத்தி வரதா் புகழுக்குரிய காஞ்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயிலில் அா்த்தநாரீஸ்ரா் அலங்காரக் காட்சி

காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயிலில் பங்குனி மாத அமாவாசையையொட்டி, சனிக்கிழமை உற்சவா் அங்காளம்மன் அா்த்தநாரீஸ்வரா் அலங்காரத்தில் அருள்பாலித்தாா். காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ளது அங்கா... மேலும் பார்க்க