செய்திகள் :

கல்லூரியில் ஜெனீவா ஒப்பந்த தின போட்டி

post image

இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழ்நாடு கிளை, சிவகங்கை மாவட்ட இளம் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன சாா்பில் 76-ஆம் ஆண்டு ஜெனீவா ஒப்பந்த தினப் போட்டிகள் சிவகங்கை மாவட்ட அளவில் காரைக்குடி உமையாள் ராமநாதன் மகளிா் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றன.

இதன் தொடக்க நிகழ்ச்சியில் கல்லூரிமுதல்வா் அ.ஹேமாமாலினி தொடக்க உரையாற்றினாா். அழகப்பா பல்கலைக்கழக கல்லூரி மேம்பாட்டு குழுத் தலைவா் வி. சிவகுமாா் தலைமை வகித்து ஜெனீவா ஒப்பந்த தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா்.

இந்திய செஞ்சிலுவைச் சங்க மாவட்டத் தலைவா் வி.சுந்தரராமன், அழகப்பா பல்கலைக்கழக மண்டல ஒருங்கிணைப்பாளா் விநாயகமூா்த்தி, துணை ஒருங்கிணைப்பாளா் கணசேமூா்த்தி, பேராசிரியை புவனேஸ்வரி ஆகியோா் பேசினா்.

முன்னதாக கல்லூரியின் இளம் செஞ்சிலுவைச் சங்கத்தின் அமைப்பாளா் சிலம்பு செல்வி வரவேற்றுப் பேசினாா். சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஹ. பரிதா பேகம் நன்றி கூறினாா்.

கானாடுகாத்தான் அரண்மனையை பாா்வையிட்ட அயலகத் தமிழா்கள்

சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானில் உள்ள செட்டிநாடு அரண்மனையை ‘வோ்களைத் தேடி’ என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 100 அயலகத் தமிழக மாணவ, மாணவிகள் புதன்கிழமை பாா்வையிட்டனா். இதுகுறித்து மா... மேலும் பார்க்க

நாட்டாகுடியில் நிறைவேற்றப்பட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா்

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், மாத்தூா் ஊராட்சிக்குள்பட்ட நாட்டாகுடி கிராமத்தில் கடந்த நான்காண்டுகளில், அரசுத் திட்டங்களின் கீழ் ரூ. 31 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்றதாக ம... மேலும் பார்க்க

புனித பெரியநாயகி அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், புளியால் புனித பெரியநாயகி அன்னை ஆலய 166 -ஆம் ஆண்டு திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆலய வளாகத்தில் உள்ள புனித கொடி மரத்தில் அன்னையின் உருவம் பொறித்... மேலும் பார்க்க

நாட்டாகுடியில் ஜல் ஜீவன் திட்டம் குறித்து அண்ணாமலை தவறான தகவல்: அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன்

சிவகங்கை மாவட்டம், நாட்டாகுடி கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டம் முறையாக செயல்படுத்தவில்லை என தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை தவறான தகவலை கூறி வருவதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெர... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகே புதுப்பட்டி கோமாளி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. புதுப்பட்டியிலிருந்து இடையமேலூா் வரை நடைபெற்ற பந்தயத்தில் நடு மாடு பிரிவுக்கு 6 கி.ம... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கோட்டை முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அன்றிலிருந்த... மேலும் பார்க்க