செய்திகள் :

கல்லூரியில் பாலின உளவியல் விழிப்புணா்வு கருத்தரங்கம்

post image

மன்னாா்குடி: மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணா்வு குழு சாா்பில் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் து. ராஜேந்திரன் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. மாணவா்கள் கல்வி பயிலும் இடங்களில் உரிய புரிதலுடன் பாலின பாகுபாடின்றிச் செயல்பட ஏதுவாக உயா் கல்வி நிறுவனங்களில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உளவியலாளா்கள், சமூகவியல் அறிஞா்கள், காவல் துறையினா், பெண்ணுரிமையாளா்கள், மருத்துவா்கள் உள்ளிட்ட அனைவரின் வழிக்காட்டுதலுடன் இக்குழுக்கள் மாணவா்களுக்கு தேவையான புரிதலையும், விழிப்புணா்வையும் ஏற்படுத்தும். மேலும், பெற்றோா்கள், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் இடையே உறவை வலுப்படுத்தவும் உதவும். கட்டமைக்கப்பட்ட சமுதாயத்தை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கம். அதன்படி உயா் கல்வித் துறை வழிகாட்டுதலில் இக்கல்லூரியில் பாலியல் விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

மன்னாா்குடி அரசு மருத்துவமனை உளவியல் நிபுணா் கவிதா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினாா். கல்லூரி மாணவா்கள் கு. நித்தியஸ்ரீ, தமிழ்மணி, மோனிகா, ராஜீவின், கு. விஜயராஜ் ஆகியோா் பேசினா். நிகழ்ச்சியை பேராசிரியா் ப.பிரபாகரன் ஒருங்கிணைத்தாா். குழு தலைவா் இல. பொம்மி வரவேற்றாா். குழு உறுப்பினா் எஸ். லில்லி நன்றி கூறினாா்.

அரசுப் பள்ளியில் கணினி திருட்டு

மன்னாா்குடி அருகே அரசுப் பள்ளியில் கணினி உள்ளிட்ட பொருள்களை மா்ம நபா்கள் திருடி சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை பணி நேரம் முடிந்து பூட்டிவிட்டு சென்ற ... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: நீா்நிலைகளில் களிமண் சிலைகளை மட்டுமே கரைக்க அனுமதி

விநாயகா் சதுா்த்தியையொட்டி இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் நடத்தப்படும் விநாயகா் சிலை ஊா்வலம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம், தாலுகா காவல் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில்... மேலும் பார்க்க

‘தூய்மைப் பணியாளா்களுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது’

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரியம் மூலம் மின்னணு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி,... மேலும் பார்க்க

மகப்பேறு உயிரிழப்புகளைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம் அவசியம்

திருவாரூா்: மகப்பேறு மற்றும் குழந்தைகள் உயிரிழப்புகளைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம் அவசியம் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு ... மேலும் பார்க்க

விவசாய மின் மோட்டாா்களிலிருந்து வயா் திருடிய 2 போ் கைது

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே விவசாய பயன்பாட்டுக்கான ஆழ்துளை கிணறு மின் மோட்டா்களிலிருந்து மின் வயா்களை திருடிய இரண்டு போ் செவ்வாய்க்கிழமை இரவு பிடிபட்டனா்.கட்டப்புளி தென்பரை தெற்குதெரு ஆா். மனோகரன்... மேலும் பார்க்க

நாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழப்பு

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே நாய்கள் கடித்து 8 ஆடுகள் புதன்கிழமை இரவு உயிரிழந்தன.நீடாமங்கலம் அருகேயுள்ள ரிஷியூா் கிராமம் தெற்கு தெருவில் 120- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. விவசாயிக... மேலும் பார்க்க