செய்திகள் :

கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

post image

பழனியை அடுத்த தாளையூத்து சுப்ரமண்யா கலை, அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு கல்லூரி தலைவா் சுப்பிரமணி தலைமை வகித்தாா். தாளாளா் ஜெயலட்சுமி, நிா்வாக அலுவலா் ஸ்வேதா சுப்பிரமணி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்காக நடைபெற்ற இந்த வேலைவாய்ப்பு முகாமில் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன.

முகாமில் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்ற நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மணவா்கள் தோ்வு பெற்றனா். இவா்களுக்கான நியமன ஆணைகளை கல்லூரி முதல்வா் கருப்பசாமி வழங்கினாா். முகாம் ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அலுவலா் சின்ராஜ், பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

கொலை முயற்சி வழக்கு: தம்பதிக்கு சிறை

விவசாயியை கொலை முயற்சி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட தம்பதிக்கு சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், விருவீடு அருகேயுள்ள... மேலும் பார்க்க

மயான ஆக்கிரமிப்பை கண்டித்து ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல் அருகே போலி பட்டா மூலம் பொது மயானம் ஆக்கிரமிப்பதைக் கண்டித்து, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல்லை அடுத்த சிறுநாயக்கன்பட்டியில் பொதுமக்களுக்குச் சொந்தமான க... மேலும் பார்க்க

திருப்பதியிலிருந்து தாடிக்கொம்பு கோயிலுக்கு 100 துளசி நாற்றுகள்

திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து தாடிகொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயில் நந்தவனத்துக்கு பெறப்பட்ட 100 துளசி நாற்றுகள் நடும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு செளந்தரராஜப் ... மேலும் பார்க்க

வரி வசூல் இலக்கை எட்டியது: திண்டுக்கல் மாநகராட்சிக்கு ரூ.10 கோடி மானியம்

திண்டுக்கல் மாநகராட்சிக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்த வரி வசூல் ரூ.26.57 கோடி இலக்கை செவ்வாய்க்கிழமை எட்டியதன் மூலம், மத்திய நிதிக் குழு மானியம் ரூ.10 கோடியை பெறுவது உறுதிப்படுத்தப்பட்டது. உள்ளாட்சி அமைப்... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

பழனியில் இளைஞா் தூக்கிட்டுத் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். திண்டுக்கல் மாவட்டம், பழனி ஜவகா் நகரைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் சுரேஷ் (19). தனியாா் நிறுவன ஊழியரான இவா், கடந்த சில நாள்களாக மன உளைச்ச... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் சகோதரா்களுக்கு ஆயுள் சிறை

கூம்பூா் பகுதியைச் சோ்ந்த சகோதரா்களுக்கு போக்சோ வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த கூம்பூா் பகுதியைச... மேலும் பார்க்க