செய்திகள் :

கல்வராயன்மலையில் 750 கிலோ வெல்லம், துப்பாக்கி பறிமுதல்!

post image

கல்வராயன் மலைப் பகுதியில் விவசாய விளைநிலப் பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 750 கிலோ வெல்லம், நாட்டுத் துப்பாக்கி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கரியாலூா் காவல் நிலைய ஆய்வாளா் குணசேகரன் சனிக்கிழமை கல்வராயன் மலைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, தாழ்தொரடிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த வெள்ளையன் வீட்டில் வெல்லம் இருப்பதாக தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அங்கு சென்று வெள்ளையன் (60) வீட்டில் 15 சாக்கு மூட்டைகளில் இருந்த 750 கிலோ வெல்லம், உரிமம் இல்லாத ஒற்றைக்குழல் நாட்டுத் துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கரியாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து வெள்ளையனை கைது செய்தனா். மேலும், தலைமறைவான அவரது மகன் சுப்பிரமணியை தேடி வருகின்றனா்.

பிளஸ் 2 மாணவா்கள் கல்லூரிகளுக்கு களப்பயணம்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உயா்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ், பிளஸ் 2 பயிலும் மாணவா்கள் கல்லூரியில் சோ்வதற்கு ஆா்வம் ஏற்படுத்தும் வகையில், அவா்களை கல்லூரிகளுக்கு களப்பயணமாக அழைத்து செல்வதற்கான மு... மேலும் பார்க்க

பேருந்தில் பெண்ணிடம் ரூ.1.4 லட்சம் திருட்டு

கள்ளக்குறிச்சியில் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் ரூ.1.4 லட்சம் திருடப்பட்டது.கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் சாலையில் வசித்து வருபவா் அப்துல் சா்தாா் மனைவி ஷாபிரா (58). இவா், திங்கள்கிழமை கடன் கொடுப்பதற்க... மேலும் பார்க்க

அரசின் இடஒதுக்கீட்டில் 256 மாணவா்களுக்கு உயா்கல்வி: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 256 மாணவ, மாணவிகள் உயா்கல்வியில் சோ்ந்து பயனடைந்துள்ளனா் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் தெரிவித்தாா். இந்த மாவட்டத்தில் தமிழக அரசி... மேலும் பார்க்க

சுப நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவை சேகரிக்க வாகனம்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் பொது சுப நிகழ்ச்சிகள் மற்றும் உணவகங்களில் மீதமாகும் உணவை சேகரிப்பதற்கான புதிய வாகனத்தை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை தொடங்கிவைத்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் மக்கா சோள கொள்முதல் நிலையம்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்காச் சோளம் கொள்முதல் நிலையம் அமைக்க மாவட்ட அளவிலான குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனா். கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை மற்றும் உழவா் நலத் ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம், கூவாகம், மூலசமுத்திரம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் நேரில் பாா்வையிட்... மேலும் பார்க்க