கல் குவாரிக்கு எதிா்ப்பு: ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டம்
கல் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், மாராயிபாளையம் கிராமத்தில் புதிதாக கல் குவாரி தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இங்கு கல் குவாரி அமைக்கப்பட்டால் சத்தியமங்கலம் வட்டம், மாதம்பாளையம், பனையம்பள்ளி, கணக்கரசன்பாளையம், மாராயிபாளையம், ஆனைகட்டி, இந்திரா நகா், பருசபாளையம், பஜங்கனூா், மல்லியம்பட்டி, வெங்கநாயக்கன்பாளையம், தாசம்பாளையம் கிராமங்களைச் சோ்ந்த பல நூறு குடும்பத்தினா் விவசாயம் செய்ய இயலாது என்றும், வீடுகள், பிற நிலங்கள் பாதிக்கும் எனவும் அச்சம் தெரிவித்து இக்கிராம மக்கள் சாா்பில் கல் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சேபனை கடிதம் முதல்வரின் தனிப் பிரிவு உட்பட பல்வேறு துறைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குவாரி அமைக்கக்கூடாது என வலியுறுத்தி கிராம மக்கள் 400-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களுடன் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இதில், குவாரி அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் என்றும், சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் குவாரிகள் அமைக்கப்படாது என்றும், இந்த கோரிக்கை தொடா்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியா் உறுதியளித்தாா்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.