செய்திகள் :

கழிப்பறையில் புகைப்பிடித்த இளம் ஜோடியால் 17 மணி நேரம் தாமதமான விமானம்!

post image

மெக்ஸிகோவில் இருந்து லண்டன் சென்றுக்கொண்டிருந்த விமானத்தின் கழிப்பறையில் இளம் ஜோடி ஒன்று, வெளியே வராமல் தொடர்ந்து புகைப்பிடித்துக்கொண்டிருந்ததால், விமானப் பயணம் 17 மணி நேரம் தாமதமானது.

விமான ஊழியர்கள் மற்றும் விமானியின் அறிவுறுத்தலையும் பொருட்படுத்தாது அந்த இளம் ஜோடி கழிப்பறையில் இருந்து வெளியே வராததால், பாதியிலேயே விமானம் தரையிறக்கப்பட்டது. 17 மணி நேர போராட்டத்துக்குப் பிறகே விமானத்தில் இருந்த மற்ற பயணிகள் திட்டமிட்டபடி அழைத்துச்செல்லப்பட்டனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த டியூஐ விமான நிறுவனம், ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்க நாடுகளுக்கு பயணச் சேவையை வழங்கி வருகிறது.

அந்தவகையில், மெக்ஸிகோவில் இருந்து நேற்று பயணிகளுடன் லண்டன் சென்றுக்கொண்டிருந்த விமானத்தில், இளம் ஜோடி ஒன்று கழிப்பறையில் இருந்து நீண்ட நேரமாக வெளியே வரவில்லை என்றும், அவர்கள் தொடர்ந்து புகைப்பிடித்துக்கொண்டிருப்பதாகவும் விமானிக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதன் பிறகு, கழிப்பறையில் உள்ள இருவர் வெளியே வருமாறு விமானி அறிவுறுத்தியுள்ளார். ஆனால், மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் அந்த இளம் ஜோடி அறிவுறுத்தலைப் பொருட்படுத்தவில்லை.

மூன்று மணிநேரமாக பலமுறை அறிவுறுத்திய பிறகும் அவர்கள் வராததால், மெக்ஸிகோ எல்லையில் இருந்து வட அமெரிக்காவில் உள்ள மெய்ன் என்ற இடத்திற்கு விமானத்தை திருப்புவதாக விமானி அறிவித்துள்ளார். திட்டமிடப்படாத இடத்தில் விமானம் தரையிறக்கப்பட்டதால், விமானத்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர்.

17 மணி நேரத்துக்குப் பிறகு இரவு 9.30 மணியளவில் அந்த ஜோடி வெளியே வந்துள்ளது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய பயணிகள், விரைவில் விமானத்தை இயக்க கோரிக்கை வைத்தனர். சக பயணிகளிடம் மன்னிப்பு கோரிய விமானி, பின்னர் விமானத்தை இயக்கிச் சென்றதாக லண்டனைச் சேர்ந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | உள்ளூர் விமானம் என நினைத்து செளதி சென்ற பாகிஸ்தான் இளைஞர்!

Drunk couple's four-hour smoking session in plane toilet leaves others stranded at 'warzone' airport for 17 hours

மியான்மா் எல்லையில் உல்ஃபா முகாம்கள் மீது இந்திய ராணுவம் ட்ரோன் தாக்குதல்?

மியான்மா் எல்லையில் உள்ள தங்கள் முகாம்கள் மீது ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் ஏவுகணை மூலம் இந்திய ராணுவம் தாக்குதல்களை நடத்தியதாக தடைசெய்யப்பட்ட உல்ஃபா(ஐ) தீவிரவாத அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரி... மேலும் பார்க்க

வங்கதேசம்: சுதந்திர போராட்ட நினைவுச் சின்னம் தகா்ப்பு

வங்கதேச சுதந்திர போரை பிரதிபலிக்கும் வகையில் நிறுவப்பட்ட நினைவுச் சின்னம் தகா்க்கப்பட்டது. இதற்குப் பதிலாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை நினைவுகூ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் 5-வது முறை ட்ரோன் தாக்குதல்!

பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த கைபா்பக்துன்கவா மாகாணத்தில் அமைந்துள்ள மிா்யான் காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் சிறிய ரக ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் சனிக்கிழமை மீண்டும் தாக்குதல் நடத்தினா். கடந்த ஒரே... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட பாலஸ்தீன அமைப்புக்கு ஆதரவாக போராட்டம்: பிரிட்டனில் 70 போ் கைது!

பிரிட்டன் விமானப் படை தளத்துக்குள் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்தியதையடுத்து, அந்நாட்டு அரசால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்ட 70-க்கும் ... மேலும் பார்க்க

தென் ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி தடுப்பூசி ஆராய்ச்சி: அமெரிக்காவின் ரூ.394 கோடி நிதியுதவி நிறுத்தம்

தென் ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி தடுப்பூசி ஆராய்ச்சிக்கான 46 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.394 கோடி) நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் சுமாா் 77 லட்சம் போ் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்... மேலும் பார்க்க

ரஷியாவிலிருந்து 20.80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி: 11 மாதங்களில் இல்லாத உச்சம்!

பதினோரு மாதங்களில் இல்லாத உச்சமாக, கடந்த ஜூனில் ரஷியாவில் இருந்து ஒரு நாளைக்கு 20.80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்துக்கும் மேலாக... மேலும் பார்க்க