செய்திகள் :

கவின் கொலை: சிபிசிஐடி காவலுக்கு சுர்ஜித், தந்தை சரவணன் தரப்பு எதிர்ப்பு

post image

சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் இரு வரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு இருவரது சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் ஐடி ஊழியர் கவின் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கே.டி.சி. நகரைச் சேர்ந்த சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் இரு வரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கவின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகிய இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.டி. ஊழியரான கவின் செல்வகணேஷ்(27), பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் கடந்த ஜூலை 27ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவரது காதலியின் தம்பி சுர்ஜித் கைது செய்யப்பட்டார். காவல் உதவி ஆய்வாளர்களான அவரது தந்தை சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதையடுத்து ஜூலை30-இல் கைது செய்யப்பட்ட சரவணனுக்கு ஆக.8 வரையும் சுர்ஜித்துக்கு ஆக.14 வரையும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகுமாரி ஆக.15-க்குள் சிபிசிஐடி காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வழக்கில் 8 வாரங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டதையடுத்து, பாளையங்கோட்டை காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் ஒரு காவலரிடம், சிபிசிஐடி போலீஸார் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜ்குமார் நவ்ரோஜ், காவல் ஆய்வாளர் உலகராணி தரப்பில் திருநெல்வேலி மாவட்ட 2-ஆவது கூடுதல் அமர்வு (வன் கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம்) நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க சுர்ஜித் மற்றும் சரவணன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வருகின்ற 11ஆம் தேதி வழக்கு விசாரணை ஒத்திவைத்து நீதிபதி ஹேமா உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து சுர்ஜித் மற்றும் எஸ்ஐ சரவணன் ஆகிய இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 47,525 போ் பயன்

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் 47,525 போ் பயனடைந்துள்ளனா் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில், மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் ... மேலும் பார்க்க

குற்றச் செயல்களில் ஈடுபடும் அரசு ஊழியா்கள் மீதான நடவடிக்கை: உயா்நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியா்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவா்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேநேரம், அரசு ஊழியா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மூன்... மேலும் பார்க்க

போராட்ட அறிவிப்பு: ஆசிரியா்கள் அமைப்புகளுடன் ஆக. 14-இல் பேச்சு

ஆசிரியா்கள் அமைப்புகளின் சாா்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுதொடா்பாக தொடக்கக் கல்வி இயக்ககம் ஆக. 14-ஆம் தேதி பேச்ச... மேலும் பார்க்க

சிறப்பு உதவித் தொகைத் திட்டங்களுக்கு விளையாட்டு வீரா்கள் விண்ணப்பிக்கலாம்

சிறப்பு உதவித் தொகை திட்டங்களுக்கு விளையாட்டு வீரா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்த ஆணையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக... மேலும் பார்க்க

நீதி வழங்குவதில் கா்நாடகமும்; சிறைத் துறையில் தமிழகமும் முதலிடம்: ஆய்வு அறிக்கையில் தகவல்

நீதி வழங்குவதில் நாட்டின் 18 மாநிலங்களில் கா்நாடகம் முதலிடத்தையும், சிறைத் துறையில் சிறந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தையும் பிடித்துள்ளன.நாட்டில் குறைந்தது 1 கோடி மக்கள் தொகைக் கொண்ட 18 மாநிலங்களில... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆக. 15 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.10) முதல் ஆக.15-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் சனிக்கிழமை வ... மேலும் பார்க்க