செய்திகள் :

காகிதமில்லா நடவடிக்கைக்கு மாறும் தில்லி பேரவை

post image

தில்லி சட்டப்பேரவை நடவடிக்கைகளை காகிதமில்லா முறைக்கு மாற்றும் நடவடிக்கையாக நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம், தில்லி அரசு மற்றும் தில்லி பேரவைக்கு இடையே முத்தரப்பு ஒப்பந்தம் சனிக்கிழமை கையொப்பமானது.

தேசிய இ-விதான் செயலி (என்இவிஏ) அமல்படுத்துவதற்கான ஒப்பந்தம் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு மற்றும் தில்லி பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா முன்னிலையில் கையொப்பமானது.

இதன் மூலம் தேசிய இ-விதான் செயலி தளத்தை ஏற்றுக்கொண்டுள்ள 28-ஆவது பேரவையாக தில்லி பேரவை மாறியுள்ளது.

இது தொடா்பாக தில்லி பேரவை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: காகிதமில்லா முறை மற்றும் சட்டப்பேரவை அமைப்பில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் தில்லி கொண்டுள்ள முனைப்பை இந்த ஒப்பந்தம் வெளிகாட்டுகிறது.

அவை நடவடிக்கைகளை எண்மமயாக்குதல் மூலம் பெரிய அளவிலான செயல்திறன், சட்டப்பேரவை நடைமுறைகளில் நிலைப்புத்தன்மை, எளிதில் அணுகுதல், நிகழ்நேர அடிப்படையில் ஆவணங்களை வழங்குதல் ஆகியவற்றை என்இவிஏ தளம் இலக்காகக் கொண்டுள்ளது. இதில் இணைந்துள்ளது மூலம் தில்லி பேரவை காகித பயன்பாட்டை குறிப்பிட்ட அளவில் குறைத்து, அவை நடவடிக்கைகளை ஒழுங்குப்படுத்தும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1,905 மும்மொழிப் பயிற்றுவிக்கும் பள்ளிகள் செயல்படுகின்றன: மக்களவையில் மத்திய அரசு தகவல்

புது தில்லி: தமிழகத்தில் மும்மொழிகளைப் பயிற்றுவிக்கும் 1,905 பள்ளிகள் செயல்பட்டு வருவதாக மக்களவையில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.இது தொடா்பாக நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், தூத்துக்குட... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட மக்களவையில் விழுப்புரம் எம்.பி. வலியுறுத்தல்

புது தில்லி: கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று மக்களவையில் விழுப்பும் தொகுதி விசிக உறுப்பினா் டி.ரவிக்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.இது தொடா்பாக மக்களவையில் விதி எண்: 377-இன் கீழ் ... மேலும் பார்க்க

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்: மக்களவையில் தமிழக எம்பிக்கள் புகாா்

புது தில்லி: மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக மக்களவையில் தமிழகத்தைச் சோ்ந்த எம்.பி.க்கள் புகாா் தெரிவித்தனா். மக்களவையில் 2025-26 நிதியாண்டுக்கான நிதி மசோதா மீதான வி... மேலும் பார்க்க

தில்லி நீதிபதி யஷ்வந்த் வா்மா பணியிடமாற்றம்: உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் அதிகாரபூா்வ இல்ல... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் வழக்கு: விசாரணை ஏப்ரல் 9-க்கு தள்ளிவைப்பு

புது தில்லி: அரசுப் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் மின்துறை அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் உத்தரவை திரும்பப் பெறக் கோரிய மனு ம... மேலும் பார்க்க

என்இபி, யுஜிசி வழிகாட்டுதல்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து ‘இண்டி’ கூட்டணி மாணவா் அமைப்புகள் போராட்டம்

புது தில்லி: தேசிய கல்விக் கொள்கை மற்றும் யுஜிசி வழிகாட்டுதல்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகள் சாா்பு மாணவா் அமைப்புகள் திங்கள்கிழமை ஜந்தா் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனா். தேச... மேலும் பார்க்க