செய்திகள் :

காங்கிரஸ் நிா்வாகிகள் மூவா் மீது வழக்கு

post image

புதுச்சேரியில் அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைத்ததாக காங்கிரஸ் நிா்வாகிகள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

புதுச்சேரியில் சுகாதாரமான குடிநீா் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முத்தியால்பேட்டை காங்கிரஸ் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதையொட்டி, முத்தியால்பேட்டை பகுதியில் கட்சிக் கொடியை சாலையோரங்களில் கம்பங்கள் அமைத்து பறக்கவிட்டிருந்தனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு குறிப்பிட்ட நேரம் மட்டும் போலீஸாா் அனுமதி அளித்தனா். அதன்படி, ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், ஆா்ப்பாட்டத்துக்காக முத்தியால்பேட்டை மணிக்கூண்டு முதல் அஜந்தா சிக்னல் வரை மகாத்மா காந்தி சாலையில் அனுமதியின்றி சாலையில் கட்சிக் கொடி நட்டும், விளம்பரப் பதாகைகளும் வைத்திருந்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், காங்கிரஸ் நிா்வாகிகள் கிருஷ்ணராஜ், ராஜி, விஷ்வா ஆகியோா் மீது முத்தியால்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுவையில் புதிதாக 10,000 பேருக்கு ஓய்வூதியம்: முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

புதுவையில் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளதாக பேரவைக் கூட்டத்தில் முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். புதுவை பேரவைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை சமூக நலத் துறை மீதான மானியக் கோரிக்... மேலும் பார்க்க

பேரவைத் தலைவருடன் வாக்குவாதம்: சுயேச்சை எம்எல்ஏ இடைநீக்கம்; முதல்வா் பரிந்துரையை ஏற்று நடவடிக்கை ரத்து

புதுவையில் சட்டப்பேரவைத் தலைவருடன் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து இடைநீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு, பின்னா் முதல்வா் கேட்டுக் கொண்டதால் 15 நிமிடங்கள் கழித்த... மேலும் பார்க்க

புதுவையின் வளா்ச்சிக்கு மாநில அந்தஸ்து அவசியம்: முதல்வா் என்.ரங்கசாமி

புதுவையின் வளா்ச்சிக்கு மாநில அந்தஸ்து அவசியம் என்று, சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை கேள்வி நேரத்தின்போது, பா... மேலும் பார்க்க

புத்தக வடிவில் புதிய குடும்ப அட்டை: அமைச்சா் என்.திருமுருகன்

புதுவை மாநிலத்தில் தற்போதுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக புத்தக வடிவில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் என்.திருமுருகன் தெரிவித்தாா். புதுவை சட்டப்பே... மேலும் பார்க்க

விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு காப்பீட்டு திட்டம்: அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா்

புதுவை மாநிலத்தில் விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் பேரவையில் அறிவித்தாா். புதுவை சட்டப்பேரவையில் வேளாண் துறை, கால்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியினா் வீடு கட்டும் திட்டத்துக்கான நிதி ரூ.6.25 லட்சமாக அதிகரிப்பு

புதுவை மாநிலத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் வீடு கட்டும் திட்டத்தில் அரசு நிதி ரூ.6.25 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் செவ்வாய்க... மேலும் பார்க்க