செய்திகள் :

காசி விஸ்வநாதர் கோயிலில் ஆக.11 முதல் பிளாஸ்டிக் தடை!

post image

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் ஆகஸ்ட் 11 முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்து கோயில் நிர்வாகம் தடை விதித்து அறிவித்துள்ளது.

கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிட்ட சுவரொட்டிகளில், காசி விஸ்வநாதரை சந்திக்கவரும் பக்தர்கள் யாரும் பிளாஸ்டிக் பொருள்களுடன் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவபெருமானின் புனித தலமாகக் கருதப்படும் ஆலயத்தில், கோயிலின் புனிதத்தைக் காக்கவும், தூய்மையாகப் பராமரிக்கவும் பிளாஷ்டிக் இல்லாத சூழலைப் பராமரிக்க வேண்டும் என்று கோயில் நிர்வாகத்தின் சார்பில் பணிவுடன் பக்தர்களைக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஆகஸ்ட் 11 முதல், பக்தர்கள் இனி பிளாஸ்டிக் கேனைப் பயன்படுத்தி சிவபெருமானுக்கு தண்ணீர் வழங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆடி மாதத்தின் முதல் திங்கள்கிழமை முதல் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. பக்தர்கள் பிளாஸ்டிக்கில் பிரசாதங்களை எடுத்துச் செல்லவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கோயிலின் தலைமை நிர்வாக அதிகாரி விஸ்வபூஷன் மிஸ்ரா கூறுகையில்,

காசி விஸ்வநாதர் கோயில் ஆன்மிக மையம் மட்டுமல்ல, தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் ஒரு முன்மாதிரியாக மாற வேண்டும். மாசுவிலிருந்து விடுபட்டு எதிர்கால சந்ததியினருக்குப் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சி இது.

நாடு முழுவதும் வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு வருவதைத் தவிர்த்து, சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கோயிலின் நுழைவுவாயில்களிலும் பிளாஸ்டிக் சோதனைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த முயற்சிக்கு நகராட்சி, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

எதிர்காலத்தில் இந்த பிரசாரத்தை நகரம் முழுவதும் விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Urging devotees to keep the holy site clean and plastic-free, the administration of Shri Kashi Vishwanath temple has announced a ban on plastic items starting August 11, officials said

ஆபரேஷன் மகாதேவ்: பஹல்காம் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டவர் கொலை

பஹல்காம் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட ஹாஸிம் மூஸா ஃபெளஜி, ஆபரேஷன் மகாதேவ் பெயரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் வெளியி... மேலும் பார்க்க

கர்னல் சோஃபியாவுக்கு ஏற்பட்ட அவமதிப்பு குறித்து பேசாத ராஜ்நாத் சிங்: சு.வெங்கடேசன்

ஆபரேஷன் சிந்தூரில் முக்கியப் பங்காற்றிய கர்னல் சோஃபியாவுக்கு ஏற்பட்ட அவமதிப்பு குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசாதது ஏன்? என மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். பஹ... மேலும் பார்க்க

மணிப்பூரில் தோண்டத்தோண்ட கிடைக்கும் ஆயுதங்கள்! பாதுகாப்புப்படை தீவிர சோதனை

மணிப்பூரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய சோதனையில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சூரசந்த்பூர், கேங்க்போக்பி, பேர்ஸ்வால், டெங்க்நௌபால், சண்டெல் ஆகிய மலைப்பிரதேச மாவட்டங்களில் கடந்த சில ந... மேலும் பார்க்க

ஐபிஎல் கூட்ட நெரிசல்: பணியிடைநீக்கம் செய்யப்பட்ட பெங்களூரு காவல் ஆணையருக்கு மீண்டும் பணி! கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூரு காவல் ஆணையரை பணியிடைநீக்கம் செய்த உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக கர்நாடக அரசு திங்கள்கிழமை(ஜூலை 28) வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளது.ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல்முறையாக சாம்பியன் ... மேலும் பார்க்க

அமெரிக்காவின் தலையீடு இல்லை என திட்டவட்டமாக மறுக்கவில்லை: பிரியங்கா

ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாகக் கூறவில்லை என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட கால இ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி பேசவில்லை - ஜெய்சங்கர்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசவில்லை என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு... மேலும் பார்க்க