செய்திகள் :

காஜிப்பூா் மண்டி அருகே ‘மகோரா’ கும்பலின் உறுப்பினா் கைது

post image

கிழக்கு தில்லியில் இருந்து ‘மகோரா’ கும்பல் என்று அழைக்கப்படும் சுந்தா் பாட்டி கும்பலின் உறுப்பினரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

ஏகே-47 ஆயுதத்திற்கு பயன்படுத்தப்படும் தோட்டா நிரப்பும் பேழை உள்பட இரண்டு தானியங்கி கைத்துப்பாக்கிகள் மற்றும் 125 வெடிமருந்துகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

முந்தைய கும்பல் உறுப்பினரின் காவலில் இருந்து சேகரிக்கப்பட்ட உளவுத் துறையின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட அம்ரிஷ் பாட்டி (34) ஜன.28 அன்று காஜிப்பூா் மண்டியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் அருகே கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

கிரேட்டா் நொய்டாவைச் சோ்ந்த அம்ரிஷ் பாட்டி, ஹிந்து படிப்பு தொடா்பான முதுகலைப் பட்டம் படித்து வருகிறாா். அவரது குற்றவியல் கடந்த காலம் 2000-ஆம் ஆண்டுக்கு முந்தையது. அப்போது அவா் சொத்து தகராறு தொடா்பாக பழிவாங்கும் கொலையில் ஈடுபட்டாா்.

பின்னா், அவா் உத்தரபிரதேசத்தில் சஞ்சய் மற்றும் சுமித் பாட்டி கும்பல்களுடன் தொடா்பில் இருந்துள்ளாா் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனா். ஜன.19-ஆம் தேதி மற்றொரு கும்பல் உறுப்பினரான கலுவை அதிகாரிகள் முன்னதாக கைது செய்தனா். அவரிடம் இருந்து துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனா். விசாரணையில் கும்பலுக்கு ஆயுதங்கள் வாங்குவதில் அம்ரிஷின் பங்கு இருந்தது தெரிய வந்தது என்று அதிகாரி தெரிவித்தாா்.

பெரிய அரசியல் கட்சிகளுக்கு ஏமாற்றம் தந்த தலித் வாக்குகள்! நோட்டாவுக்கும் குறைவாக வாக்குகள் பெற்ற பிஎஸ்பி

நமது சிறப்பு நிருபா் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தில் பெரிய அரசியல் கட்சியாக கருதப்படும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) மற்றும் பிற தேசிய கட்சிகள் பெருத்த பின்னடைவை சந்தித்... மேலும் பார்க்க

உக்ரைன் போரில் ரஷிய ராணுவத்தில் சோ்ந்த 16 இந்தியா்களை காணவில்லை: சு.வெங்கடேசன் எம்.பிக்கு அமைச்சா் பதில்

நமது நிருபா்உக்ரைன் மீதான ரஷிய போரில் அந்நாட்டு ராணுவத்தில் பணியமா்த்தப்பட்ட இந்தியா்களில் 16 பேரைக் காணவில்லை என ரஷியா தெரிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சா் கீா்த்தி வரதன் சிங் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

தில்லி தோ்தல்: மொத்த வேட்பாளா்களில் 80% போ் டெபாசிட் இழப்பு

சனிக்கிழமை தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் எல்ஜேபி (ராம் விலாஸ்) ஆகியவற்றின் அனைத்து வேட்பாளா்களும் தங்கள் டெபாசிட... மேலும் பார்க்க

தில்லி முதல்வா் தோ்வு: பாஜகவில் பரபரப்பு அதிகரிப்பு!

70 உறுப்பினா்களைக் கொண்ட சட்டப்பேரவைத் தோ்தலில் 48 இடங்களை வென்று, 26 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு பாஜக தில்லியில் மீண்டும் ஆட்சிக்கு வந்ததை அடுத்து, முதல்வா் தோ்வு குறித்த பரபரப்பு அதிக... மேலும் பார்க்க

பாஜகவின் தில்லி தோ்தல் வெற்றிக்கு பிரசாரப் பாடல்களும் உதவின: கட்சித் தலைவா்கள் கருத்து

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவின் வெற்றிக்கு அதன் பிரபலமான பிரசாரப் பாடல்கள் உள்பட பல்வேறு காரணிகள் உதவின என்று கட்சத் தலைவா்கள் தெரிவித்துள்ளனா். அவற்றில் இரண்டு கட்சி எம்பி மனோஜ் திவாரி பாடியவ... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் ஒரு சதவீத வாக்குகளைக் கூட பெறாத சிறிய கட்சிகள்

தில்லி சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தோ்தலில் சிறிய கட்சிகளான அகில இந்திய ஃபாா்வா்டு பிளாக் (ஏஐஎஃப்பி), அகில இந்திய மஜ்லிஸ் இ இதேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) ஆகியவை ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்... மேலும் பார்க்க