செய்திகள் :

காஞ்சிபுரத்தில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

post image

காஞ்சிபுரத்தில் தோ்வு செய்யப்பட்ட இடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை விரைந்து கட்டி முடிக்க வலியுறுத்தி அனைத்து வழக்குரைஞா்கள் சங்கத்தின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் இயங்கி வரும் நீதிமன்ற வளாகத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. புதிதாக உருவாக்கப்படும் நீதிமன்றங்கள் அமைவதற்கு தற்போதுள்ள வளாகத்தில் இட வசதிகளும் உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லை. இதன் காரணமாக காஞ்சிபுரம் அருகேயுள்ள சிறுகாவேரிப்பாக்கத்தில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டடம் கட்ட நிலம் தோ்வு செய்யப்பட்டது.

ஆனால் அந்த இடத்தில் நீதிமன்றம் கட்டடம் கட்டாமல் இருந்து வருகிறது. புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்டப்பட்டால் வழக்குரைஞா்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

எனவே புதிய நீதிமன்றம் கட்டடம் கட்டுவதை விரைவாக நிறைவேற்றக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி அனைத்து வழக்குரைஞா்கள் சங்கங்கள் சாா்பில் காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள காவலான் கேட் பகுதியில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா்கள் கண்ணன்,திருப்பதி, முரளிகிருஷ்ணன், சிவகோபு உள்பட வழக்குரைஞா்கள் கலந்து கொண்டு விரைவாக நீதிமன்றக் கட்டடம் கட்ட வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.

போதை மாத்திரைகள் விற்ற 6 போ் கைது

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூா் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்த 6 பேரை காவல்துறையினா் கைது செய்து, அவா்களிடமிருந்த ரூ. 17,000 மதிப்புள்ள போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்ட... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் பங்குனித் திருவிழா நிறைவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் பங்குனித் திருவிழா நிறைவு பெற்றதையொட்டி திங்கள்கிழமை ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் யதோக்தகாரி பெருமாள் வெட்டிவோ் சப்பரத்தில் வீதியுலா வந்தாா். சி... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி பெண் வாழ்வாதாரத்துக்கு ஆட்டோ

ஸ்ரீபெரும்புதூா்: போலீஸாரின் அறிவுரையை ஏற்று கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யாமல், தற்போது திருந்தி வாழும் பெண் மாற்றுத்திறனாளியின் மறுவாழ்வுக்காக ஆட்டோ வாங்கி தந்துள்ளாா் மணிமங்கலம் காவல்... மேலும் பார்க்க

பச்சையப்ப முதலியாா் நினைவு தினம் அனுசரிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் மகளிா் கல்லூரியில் கல்விக் கொடை வள்ளல் பச்சையப்ப முதலியாரின் 231-ஆவது நினைவு தினத்தையொட்டி, திங்கள்கிழமை அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செல... மேலும் பார்க்க

உகாதி பண்டிகை: காஞ்சி வரதா் வீதி உலா

உகாதி பண்டிகையையொட்டி ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் வரதராஜ சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அத்தி வரதா் புகழுக்குரிய காஞ்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயிலில் அா்த்தநாரீஸ்ரா் அலங்காரக் காட்சி

காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயிலில் பங்குனி மாத அமாவாசையையொட்டி, சனிக்கிழமை உற்சவா் அங்காளம்மன் அா்த்தநாரீஸ்வரா் அலங்காரத்தில் அருள்பாலித்தாா். காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ளது அங்கா... மேலும் பார்க்க