செய்திகள் :

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை மெழுகு அச்சு எடுத்ததாகப் புகார்!

post image

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலையை, மெழுகு அச்சு எடுத்ததாக எழுந்த புகார் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் ஏகாம்பரநாதர் கோயிலில் விசாரணை நடத்தினர்.

மெழுது அச்சு எடுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து, ஏழு மணி நேரம் அர்ச்சகர்கள், ஊழியர்கள், புகார்தாரர் மற்றும் உபயதாரர் உள்ளிட்டோரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் தற்போது குடமுழுக்குக்காக திருப்பணிகள் பல கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தினேஷ் மற்றும் டில்லிப் பாபு ஆகியோர் மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு புகார் மனு அளித்தனர்.

அதில் ஏகாம்பரநாதர் திருக்கோயில் மூலவர் பின்புறம் உள்ள சோமாஸ்கந்தர் கல் சிலையை சிலர் திடீரென மெழுகு அச்சு எடுத்துச் சென்றதாகவும், இது குறித்து முறையான தகவல்கள் செயல் அலுவலர் உள்ளிட்டோர் தர மறுக்கின்றனர் என புகாரில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி சம்பத் தலைமையிலான உதவி ஆய்வாளர்கள் பாபு அம்ப்ரோஸ் ஆனந்த் ஆகியோர் திருக்கோயில் அர்ச்சகர்கள், ஊழியர்கள், புகார்தாரர் மற்றும் உபயதாரர்கள் என பத்துக்கும் மேற்பட்டோரிடம் சனிக்கிழமை காலை 11 மணி முதல் நான்கு மணி வரை தீவிர விசாரணை மேற்கொண்டு அறிக்கையை பெற்றனர்.

இச்சம்பவம் கோயிலில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசு ஊழியர் தற்கொலை! மரண வாக்குமூலம் இருந்தும் அலட்சியம்! தமிழக காவல் மீது பாஜக குற்றச்சாட்டு!

வேலூரில் அரசு ஊழியராகப் பணிபுரிந்து வந்த பெண் தற்கொலை சம்பவத்தில் தமிழக காவல்துறை மெத்தனம் காட்டுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தி... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 14-ல் வெளியீடு!

கால்நடை மருத்துவப் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் ஜூலை 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசைப்பட்டியலை பல்கலைக்கழக இணையதளத்தில் https:\\adm.tanuvas.ac.in மற்றும் https:\\tan... மேலும் பார்க்க

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதிமுகவின் திட்டம் மாற்றம்! திமுக மீது இபிஎஸ் குற்றச்சாட்டு!

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதிமுகவின் திட்டத்தை திமுக அரசு மாற்றுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.கடலூர் மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரு... மேலும் பார்க்க

தவெக ஆர்ப்பாட்டத்துக்கு 16 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி

சென்னையில் தவெக ஆர்ப்பாட்டம் நடத்த 16 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி அளித்துள்ளது. மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் காவல்துறையினரின் அராஜகத்துக்கு எதிராக பல்வேறு கட்சியினர் கண்டனம்... மேலும் பார்க்க

உலக பாரம்பரிய சின்னமாக செஞ்சி கோட்டை! முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

செஞ்சி கோட்டையை பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அங்கீகரித்தது மகிழ்ச்சியளித்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "கிழக்கின் ட்ராய்" என்றழைக்கப்படும் செஞ்சி ... மேலும் பார்க்க

செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி

தமிழ்நாட்டில் உள்ள செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ சின்னம் என்ற அங்கீகாரம் கிடைத்தது பெருமகிழ்ச்சி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கிழக்கின் ட்ராய் என அறியப... மேலும் பார்க்க