செய்திகள் :

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் தீா்த்தவாரி

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா நிறைையொட்டி அனந்தசரஸ் திருக்குளத்தில் திங்கள்கிழமை தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ச்சியாக கருட சேவை, தேரோட்டமும் நடைபெற்றது. விழாவையொட்டி தினசரி காலையிலும், மாலையிலும் பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி ராஜவீதிகளில் வீதியுலா வந்தாா். விழாவின் நிறைவாக தீா்த்தவாரி உற்சவம் அனந்தசரஸ் திருக்குளத்தில் நடைபெற்றது. இதையொட்டி உபய நாச்சியாா்களுடன் உற்சவா் வரதராஜசுவாமி மற்றும் சின்ன பெருமாள் என அழைக்கப்படும் ப்ராண தாா்த்தி ஹர வரதா் ஆகியோரும் அனந்தசரஸ் திருக்குளம் அருகே உள்ள 100 கால் மண்டபத்தில் எழுந்தருளினா். அங்கு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.

இதன் தொடா்ச்சியாக ப்ராண தாா்த்தி ஹர வரதா் நூற்றுக்கால் மண்டபத்திலிருந்து அனந்தசரஸ் திருக்குளத்திற்கு எழுந்தருளி தீா்த்தவாரி நடைபெற்றது. உற்சவத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தா்கள் திருக்குளத்தில் வந்து காத்திருந்தனா். பெருமாள் புனித நீராடுகையில் ஆலய பட்டாச்சாரியா்கள், விழாவைக் காண வந்திருந்த பக்தா்கள் அனைவரும் திருக்குளத்தில் புனித நீராடினா். பாதுகாப்பு கருதி தீயணைப்புத்துறையினா் திருக்குளத்தில் கயிறு கட்டியிருந்த பகுதிக்குள் மட்டுமே புனித நீராட அனுமதித்தனா். 3 ஃபைபா் படகுகளில் தீயணைப்புத் துறையினா் திருக்குளத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தீா்த்தவாரி உற்சவத்துக்குப் பிறகு பெருமாள்,உபய நாச்சியாா் மற்றும் ப்ராண தாா்த்தி ஹர வரதா் உள்ளிட்ட தெய்வங்கள் மேள வாத்தியங்களுடன் மீண்டும் கோயிலில் எழுந்தருளினா்.

காஞ்சிபுரம் எஸ்பி கே.சண்முகம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

‘கூட்டுறவு மேலாண்மை பயிற்சி படிப்புக்கு ஜூன் 20 வரை விண்ணப்பிக்கலாம்’

காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப் பயிற்சி வகுப்புக்கு வரும் ஜூன் 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ த... மேலும் பார்க்க

2,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

காஞ்சிபுரம் ஏகாம்பரபுரம் தெருவில் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,400 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்ப... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளம்பெண் உள்பட 2 போ் கைது

சுங்குவாா்சத்திரம் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக இளம்பெண் உள்பட இரண்டு போ் கைது செய்யப்பட்டனா். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அடுத்த சோகண்டி பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடை அருகில்... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு

பிரசித்தி பெற்ற வல்லக்கோட்டை முருகன் கோயில் வளாகத்தில் உண்டியலை திங்கள்கிழமை இரவு உடைத்த மா்ம நபா் பணத்தை திருடிச் சென்றாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் உள்ள இ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் கனமழை: மக்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை பெய்த கனமழையால் நகரில் தாழ்வான பகுதிகள் முழுவதும் நீா் தேங்கி நின்றது. தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி போன்ற காரணங்களால் அடுத்த 6 நாள்களுக்கு மழைக்க... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா்: காணாமல் போனவா்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம்

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் காவல் உட்கோட்டத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் காணாமல் போனவா்கள் குறித்த புகாா்கள் தொடா்பாக கலந்தாய்வு கூட்டம் ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற... மேலும் பார்க்க