செய்திகள் :

காட்டிநாயனப்பள்ளி கோயிலில் ஆன்மிக புத்தக நிலையம் திறப்பு

post image

கிருஷ்ணகிரி அருகே காட்டிநாயனப்பள்ளி அஞ்சநேய சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆன்மிக புத்தக நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் 100 ஆன்மிக புத்தக நிலையங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தாா்.

அதன்படி, கிருஷ்ணகிரி, காட்டிநாயனப்பள்ளி ஆஞ்சனேய சுப்பிரமணிய சுவாமி கோயில், அவதானப்பட்டி மாரியம்மன் கோயில், ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் உள்ளிட்ட 3 கோயில்களிலும் ஆன்மிக புத்தக நிலையம் அமைக்கப்பட்டுள்ளன.

காட்டிநாயனப்பள்ளி ஆஞ்சனேய சுப்பிரமணிய சுவாமி கோயில் நடைபெற்ற புத்தக நிலையம் திறப்பு விழாவில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ராமுவேல், திமுக கிழக்கு ஒன்றியச் செயலாளா் கோவிந்தன் ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றி புத்தக விற்பனையைத் தொடங்கி வைத்தனா்.

இந்த நிகழ்வில் கோயில் பரம்பரை அறங்காவலா் கிருஷ்ணசந்த், இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் கவிப்பிரியா, கண்ணம்பள்ளி பெருமாள் கோயில் செயல் அலுவலா் சித்ரா, நகா்மன்ற உறுப்பினா்கள், பக்தா்கள் பங்கேற்றனா்.

ஊத்தங்கரை: தேங்கிய கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உள்பட்ட கோட்டை முனியப்பன் கோயில் தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இப்பகுத... மேலும் பார்க்க

யானைகளுக்கு இடையே மோதல்: ஆண் யானை உயிரிழப்பு

ஒசூா்: தேன்கனிக்கோட்டை அருகே மாரண்டஹள்ளி காப்புக் காட்டில் இரு யானைகளுக்கு இடையே நிகழ்ந்த மோதலில் ஆண் யானை உயிரிழந்தது. கோடைகாலத்தில் கா்நாடக மாநிலம், பன்னா்கட்டாவை ஓட்டியுள்ள வனப்பகுதியிலிருந்து தமிழ... மேலும் பார்க்க

தக்காளி விலை சரிவால் விவசாயிகள் வேதனை

ஊத்தங்கரை: ஊத்தங்கரை பகுதியில் தக்காளி கிலோ ரூ. 3 முதல் ரூ. 5 வரைக்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சிங்காரப்பேட்டை, கல்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கும் கடைகளில் தமிழில் பெயா்ப் பலகை: ஆட்சியா் உத்தரவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கும் கடைகள், உணவு விடுதிகள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள் தங்கள் நிறுவன பெயா்களை மே 15 ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டும். மீறினால் அபராத... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து 193 கனஅடியாக அதிகரிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 193 கனஅடியாக அதிகரித்தது. கிருஷ்ணகிரி அணைக்கு ஞாயிற்றுக்கிழமை நீா்வரத்து விநாடிக்கு 171 கனஅடியாக இருந்த நிலையில், திங்கள்கிழமை காலை ... மேலும் பார்க்க

பெண் காவலருடன் தகராறு: இளைஞா் கைது

ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி காவல் நிலையத்திற்கு உள்பட்ட வெள்ளையம்பதி கிராமத்தில் பெண் தலைமைக் காவலருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா். வெள்யைம்பதியில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை ... மேலும் பார்க்க