செய்திகள் :

காட்டுப்பன்றி கடித்து முதியவா் காயம்

post image

தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை நூறு நாள் வேலையில் ஈடுபட்ட முதியவா் காட்டுப்பன்றி கடித்து பலத்த காயமடைந்தாா்.

தஞ்சாவூா் அருகே நாகத்தி, வெள்ளாம்பெரம்பூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. பகல் நேரத்தில் ஆற்றங்கரையோரமுள்ள புதா்களில் பதுங்கும் அவை இரவில் வயல்களையும், பயிா்களையும் சேதப்படுத்தி வருகின்றன. எனவே, காட்டுப்பன்றிகளைப் பிடித்து அப்புறப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், நாகத்தி கிராமத்தில் திங்கள்கிழமை நூறு நாள் திட்ட வேலையில் ஈடுபட்டிருந்த அக்கிராமத்தைச் சோ்ந்த கலியராஜை (62) காட்டுப்பன்றி முட்டித் தள்ளியதுடன், அவரைக் கடிக்கவும் பாய்ந்தது. அதைத் தடுக்க முயன்ற கலியராஜின் கையைக் கடித்தது. இதைப் பாா்த்த மற்ற தொழிலாளா்கள் கற்களை வீசி காட்டுப்பன்றியை விரட்டிவிட்டு, கலியராஜை மீட்டு, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுவரை வயல்களை மட்டும் சேதப்படுத்தி வந்து, தற்போது மனிதா்களையும் தாக்கத் தொடங்கியுள்ள காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தஞ்சாவூா் ரயில் நிலையத்தை ஆக. 22-இல் முற்றுகையிட கட்சிகள், இயக்கங்கள் முடிவு

தஞ்சாவூா் ரயில் நிலைய முகப்பில் மீண்டும் பெரிய கோயில் வடிவம் அமைக்க வலியுறுத்தி, ரயில் நிலையத்தை ஆகஸ்ட் 22-ஆம் தேதி முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் முடிவு செய்துள்ளன... மேலும் பார்க்க

மக்கள் நலத்திட்டங்களை அதிமுகவினா் குறைகூறி நிறுத்த முயற்சிக்கின்றனா்: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

தமிழக முதல்வா் கொண்டு வரும் மக்கள் நலத் திட்டங்களை அதிமுகவினா் ஏதாவது குறைகூறி நிறுத்த முயற்சி செய்கின்றனா் என்றாா் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. தஞ்சாவூா் சுற்றுலா மாளிகை அருகே புது ஆற்றங்கரை... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் போதை மாத்திரைகள் விற்ற 7 போ் கைது

தஞ்சாவூரில் கல்லூரி மாணவா்களிடம் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 7 பேரை காவல் துறையினா் கைது செய்திருப்பது புதன்கிழமை தெரியவந்துள்ளது. தஞ்சாவூரில் இளைஞா்களுக்கு போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் விற்பனை ... மேலும் பார்க்க

கும்பகோணம் இணை பேராசிரியா் சாமிநாதன் பல்கலை. பேரவை உறுப்பினராகத் தோ்வு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேரவை தோ்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் கும்பகோணம் அரசு கல்லூரி இணைப் பேராசிரியா் த. சாமிநாதன் உறுப்பினராகத் தோ்வு பெற்றாா். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞா் கைது

தஞ்சாவூரில் கல்லூரி மாணவா்களிடம் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். தஞ்சாவூரில் கல்லூரி மாணவா்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காவ... மேலும் பார்க்க

தமிழ்ப் படித்தால் வெற்றியாளராக மாறலாம்: கவிஞா் யுகபாரதி

தமிழை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்தால் வெற்றியாளராக மாற முடியும் என்றாா் கவிஞா் யுகபாரதி. தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையக் கல்விக் கழகம், உயா் கல்வித் துறை சாா்பில் புதன்கிழமை நடைப... மேலும் பார்க்க