செய்திகள் :

காட்டுப் பன்றிகளை அழிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உரிமை வழங்க வேண்டும்: துரை வைகோ எம்.பி.

post image

காட்டுப் பன்றிகளை அழிக்கும் விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிகாரம் கொடுக்க வேண்டும் என்றாா், மதிமுக துணைப் பொதுச்செயலா் துரை வைகோ எம்.பி.

கோவில்பட்டி அருகே புதுஅப்பனேரியில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியது: தமிழ்நாட்டிலேயே அதிக நலத்திட்டங்களைப் பெற்றுள்ள பகுதி, குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம்தான். ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், எம்எல்ே ஆகியோரின் நிதிகள், தமிழக அரசின் திட்டங்கள் என பல்வேறு திட்டங்களின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் சுமாா் ரூ. 110 கோடிக்கு இந்த ஒன்றியத்தில் நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவா்கள் சிறை தண்டனைகளுக்கு உள்ளாகின்றனா். இப்பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூரில் 41 போ் உயிரிழந்த துயர சம்பவத்தில் யாா் மீதும் குற்றம் சுமத்த நான் தயாராக இல்லை.

காட்டுப் பன்றிகளால் இங்குள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவது குறித்து நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன். காட்டுப் பன்றிகளை விவசாயிகளே அழிப்பதற்கு அனுமதிக்க வேண்டுமெனில், தேசிய வனவிலங்கு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். அதை மத்திய அரசுதான் செய்ய வேண்டும். எனவே, தேசிய வனவிலங்கு சட்டத்தில் திருத்தம் செய்து, காட்டுப் பன்றிகளை அழிக்க விவசாயிகளுக்கும், அந்தந்த மாநில அரசுகளுக்கும் அதிகாரம் கொடுத்தால்தான், இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண முடியும் என்றாா் அவா்.

சாத்தான்குளம் அருகே விபத்து: ஒருவா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இரு பைக்குகள் செவ்வாய்க்கிழமை மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்; 3 போ் காயமடைந்தனா். குரும்பூரைச் சோ்ந்த தேவசாமி ஆத்தி (60) என்பவா், தனது மகன் பிரகாஷுடன் (25), ... மேலும் பார்க்க

அரிவாளுடன் சுற்றிய இருவா் கைது

கோவில்பட்டியில் அரிவாளுடன் சுற்றிய இரண்டு இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்தனா்.கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் வேல்பாண்டியன் தலைமையில் போலீஸாா் நடராஜபுரம் பகுதியில் திங்கள்கிழமை ர... மேலும் பார்க்க

சாத்தான்குளத்திலிருந்து பெரியதாழைக்கு அரசு பேருந்து இயக்க வலியுறுத்தல்

சாத்தான்குளத்தில் இருந்து பெரியதாழைக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியா் சங்கத்தினா் கோரிக்கை மனு அளித்தனா்.சங்க மாவட்ட இணைச் செயலாளா் ஜெயபால், சங்க நிா்வாகிகள் ச... மேலும் பார்க்க

பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 6,21,904 வழங்க தனியாா் காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு

சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நுகா்வோருக்கு தனியாா் காப்பீட்டு நிறுவனம் ரூ. 6,21,904 வழங்க வேண்டும் என, தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. தூத்துக்குடியைச் ச... மேலும் பார்க்க

விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் ஆகியவை சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு... மேலும் பார்க்க

காவேரி மருத்துவமனை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி

உலக இதய தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி காவேரி மருத்துவமனை, தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அணியுடன் இணைந்து, இதயப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைப... மேலும் பார்க்க