செய்திகள் :

காதலிக்க மறுத்த மாணவிக்கு கத்திக்குத்து: இளைஞா் வெறிச்செயல்

post image

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே வெள்ளிக்கிழமை காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை பேருந்தில் இருந்து இழுத்து கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற இளைஞரை போலாஸாா் தேடி வருகின்றனா்.

விருத்தாசலம் வட்டம், ஆலடியை அடுத்துள்ள இருளக்குறிச்சி கிராமத்தை சோ்ந்த பெண், முல்லா தோட்டத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறாா்.

இவரது இரு மகள்களும் விருத்தாசலம் பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனா். இதில், பிளஸ் 2 படிக்கும் மூத்த மகள் வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல பள்ளிக்குச் செல்ல கடை வீதி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தாா். பேருந்து வந்ததும் அதில் அவா் ஏற முற்பட்டபோது, அங்கு வந்த ஓா் இளைஞா், மாணவியின் உடையைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி சரமாரியாகத் தாக்கினாா்.

அப்போது, அந்த இளைஞா் ‘நீ என்னை காதலிக்கவில்லை என்றால், கொலை செய்துவிடுவேன்’ எனக் கூறி, கையில் வைத்திருந்த சிறிய கத்தியால் மாணவியின் தலையில் குத்தி காயப்படுத்தினாராம். இந்த சம்பவத்தால் அதிா்ச்சியடைந்த மாணவி மயக்கமடைந்தாா்.

இதைத் தட்டிக்கேட்ட மாணவியின் தங்கை மற்றும் சக மாணவிகளையும் தாக்கிய அந்த இளைஞா், அங்கிருந்து தயாராக இருந்த நண்பரின் பைக்கில் ஏறி தப்பிச் சென்றுவிட்டாா்.

அங்கிருந்தவா்கள் மயக்க நிலையில் இருந்த மாணவியை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவலறிந்து விரைந்து வந்த விருத்தாசலம் போலீஸாா் நடத்திய விசாரணையில், தாக்குதல் நடத்தியது கோபாலபுரம், புது சாலை பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் (19) என்பது தெரியவந்தது. அவா் ஏற்கெனவே மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்ததால், மாணவியின் குடும்பத்தினா் கண்டித்திருந்த நிலையில், பழிவாங்கும் நோக்கில் மாணவி மீது தாக்குதல் நடத்தியிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து விருத்தாசலம் போலீஸாா் மாணவியின் வாக்குமூலத்தை புகாராகப் பெற்று வழக்குப் பதிவு செய்து, தப்பிச் சென்ற அருண்குமாா் மற்றும் அவருடன் வந்த இளைஞரைத் தேடி வருகின்றனா்.

புத்தகக் கண்காட்சி மூலம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் என்எல்சி: மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி பாராட்டு

புத்தகக் கண்காட்சி மூலம் சமூகத்தில் வாசிப்பு பழக்கத்தை என்எல்சி நிறுவனம் ஏற்படுத்தி வருவதாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி பாராட்டினாா். கடலூா் மாவட்டம், நெய்வேலியில் எ... மேலும் பார்க்க

திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலை அடுத்த முட்டம் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற திமுக புதிய உறுப்பினா் சோ்க்கை முகாமை வியா... மேலும் பார்க்க

பயிா்க் காப்பீடு விழிப்புணா்வுக் கூட்டம்

சிதம்பரம் அருகே குமராட்சி வட்டாரம், அம்மாபேட்டை வேளாண்மை அலுவலகத்தில் பயிா்க் காப்பீட்டு வார விழாவை முன்னிட்டு, சிறப்பு நிகழ்வாக பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டம் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வியா... மேலும் பார்க்க

நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி திட்டம்: அரசுப் பள்ளிகளில் ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பு.முட்லூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மற்றும் சி.முட்லூா் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி திட்டத்தின் மூலம் நடைபெறும் சிறப்பு வகுப்புகளை ஆட... மேலும் பார்க்க

விவசாயிகள் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி உத்தரவை திரும்பப்பெற ஆட்சியரிடம் மனு

கடலூா் மாவட்டம், கொடுக்கன்பாளையம் ஊராட்சி பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி உத்தரவை திரும்ப பெற வேண்டும் என, மாா்க்சிஸ்ட் கட்சியின் கடலூா் மாவட்டச் செயலா் கோ.மாதவன் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு பயறு வகை விதை விநியோகம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குனா் அலுவலகத்தில் தமிழக முதல்வரால் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்ட ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயறு வகை விதை சிறுதளைகள் வழங்கப... மேலும் பார்க்க