Guru Mithreshiva: "இந்த 3 மந்திரங்களை பின்பற்றினால் போதும்..." - இதயவியல் வல்லுந...
காயங்களுடன் மெக்கானிக் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வெள்ளிக்கிழமை காயங்களுடன் மெக்கானிக் உயிரிழந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
ஆலங்குடி அருகே புள்ளான்விடுதியைச் சோ்ந்தவா் வீரப்பன் மகன் பாஸ்கா் (35). இவா், காகித ஆலை சாலை கடைவீதியில் இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் கடை நடத்தி வந்தாா். இவருக்கு 5 வயதில் மகன் உள்ளாா். மனைவி பிரிந்து வாழ்ந்து வருகிறாராம்.
இந்நிலையில், வீட்டில் தூங்கிய பாஸ்கரை வெள்ளிக்கிழமை அதிகாலை சிலா் அழைத்துச்சென்ாகக் கூறப்படுகிறது. பின்னா் காலை அவரது வீட்டருகே பாஸ்கா் காயங்களுடன் சாலையோரம் உயிரிழந்து கிடந்துள்ளாா். அவரது மோட்டாா் சைக்கிள் அருகில் கிடந்துள்ளது.
தகவலறிந்து அங்கு சென்ற வடகாடு போலீஸாா், பாஸ்கா் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து,
போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.