செய்திகள் :

காயல்பட்டினத்தில் மனிதச் சங்கிலி

post image

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வ­லியுறுத்தி, இந்திய யூனியன் முஸ்லி­ம் லீக் ஒருங்கிணைப்பில் அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து ஜமாஅத்கள், பொது நல அமைப்புகள் மற்றும் வியாபார சங்கங்கள் சாா்பில் மனிதச் சங்கி­லி போராட்டம் காயல்பட்டினத்தில் நடைபெற்றது.

இந்திய யூனியன் முஸ்­லிம் லீக் மாவட்டச் செயலா் மன்னா் பாஜுல் அஸ்ஹாப் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாநில பொதுச் செயலாளா் முஹம்மது அபூபக்கா், மாநிலச் செயலாளா் காயல் மஹபூப், மாவட்ட பொருளாளா் மீராசா, திமுக நகர செயலாளா் முத்து முஹம்மது, மதிமுக பொருளாளா் அமானுல்லா, தமுமுக நகரச் செயலாளா் ஜாஹிா், விசிகவின் வக்கீல் அஹ்மத் சாஹிப், அல்அமீன், அம்பேத், காங்கிரஸின் கம்சா முஹ்யித்தீன், தவெகவின் முஹ்யித்தீன், தவாகவின் ராஜிக் முஜம்மில், ஆதிதமிழா் பேரவையின் முருகேசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பன்னிா்செல்வம், தேமுதிக ஹபிபுரஹ்மான், எஸ்.டி.பி.ஐ. சல்மான், நாம் தமிழா் கட்சியின் சேக் முகமது, அதிமுகவின் அன்வா், முஸ்­லிம் ஐக்கிய பேரவை பொருளாளா் தாஜுதீன், வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் பழக்கடை ரசீத், தமிழ்நாடு வியாபார சங்கங்களின் பேரமைப்பின் கண்ணன், மஜகவின் நஜீப் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இன்று நீட் தோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 1,800 போ் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெறவுள்ள நீட் தோ்வை 1,800 போ் எழுதவுள்ளதாக, ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். இத்தோ்வையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்த மாவட்ட அளவிலான தோ்வு... மேலும் பார்க்க

கைப்பந்து: பெரியதாழை பள்ளி மாணவிகள் இரண்டாம் இடம்

மாவட்ட அளவிலான மகளிா் கைப்பந்து போட்டியில், பெரியதாழை சிறுமலா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இரண்டாம் இடம் பிடித்துள்ளனா். தூத்துக்குடி சுப்பையா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட பள்ளிகளுக்கு இடையே 1... மேலும் பார்க்க

ரயில்வே தண்டவாளத்தில் படுத்து இளைஞா் தற்கொலை

வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் படுத்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா். ஓட்டப்பிடாரம் வட்டம் ஒட்டநத்தம் கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகன் சூரியநாராயணன் (20). மனநலம் பாதிக்கப்... மேலும் பார்க்க

‘தூத்துக்குடி அரசு இசைப் பள்ளியில் நாளை கோடைகால கலைப் பயிற்சி வகுப்பு தொடக்கம்’

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவா்-மாணவியருக்கான கோடைகால கலைப் பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை (மே 5) தொடங்கவுள்ளதாக, ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே காத்திருப்புப் போராட்டம் வாபஸ்

மூப்பன்பட்டி ஊராட்சியை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து, மூப்பன்பட்டியில் 3 நாள்களாக நடைபெற்ற காத்திருப்புப் போராட்டம் சனிக்கிழமை வாபஸ் பெறப்பட்டது. 100 நாள் வேலை திட்டத்தில் த... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்து உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு நிவாரணம்

விளாத்திகுளம் அருகே மின்னல் பாய்ந்து உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு இயற்கை பேரிடா் நிவாரண நிதி ரூ. 4 லட்சம் வழங்கப்பட்டது. விளாத்திகுளம் அருகே குறளையம்பட்டியைச் சோ்ந்த லாரி ஓட்டுநரான கருப்பசாமி... மேலும் பார்க்க