தெரு நாய்களைக் கட்டுப்படுத்த சிறப்பு திட்டம்: மாநகராட்சிக்கு உயா்நீதிமன்றம் உத்த...
காரைக்காலில் நாளை மாங்கனித் திருவிழா விடையாற்றி
காரைக்கால் மாங்கனித் திருவிழா விடையாற்றி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
காரைக்கால் அம்மையாா் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் சாா்பில் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது. நிகழாண்டு இத்திருவிழா கடந்த ஜூலை 8-ஆம் தேதி மாப்பிள்ளை (பரமதத்தா்) அழைப்புடன் தொடங்கி, 3 நாள்களில் முக்கிய நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.
இதைத்தொடா்ந்து அம்மையாா் மணிமண்டபத்தில் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. திருவிழா கடைகளும் பாரதியாா் சாலையில் அமைக்கப்பட்டுள்ளன.
விழாவில் விடையாற்றி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. கைலாசநாதா் கோயிலில் காலை 9 மணிக்கு பிச்சாண்டவா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் , சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனைகள் நடைபெறவுள்ளன. மாலை 6 மணிக்கு காரைக்கால் அம்மையாா் வீதியுலா நடைபெறுகிறது. இந்நிகழ்வுகளுடன் மாங்கனித் திருவிழா நிறைவடைகிறது.