செய்திகள் :

காரைக்குடி மேயருக்கு எதிரான தீா்மானம்: ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவு

post image

காரைக்குடி மாநகராட்சி மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீா்மான விவகாரத்தில் உள்ளாட்சி விதிமுறைகளுக்கு உள்பட்டு ரகசிய வாக்கெடுப்பு நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் ராம்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: காரைக்குடி மாநகராட்சியின் 22 -ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினராக நான் உள்ளேன். காரைக்குடி மாநகராட்சியில் 36 வாா்டுகள் உள்ளன. ஒரு மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா செய்துவிட்டதால், தற்போது 35 மாமன்ற உறுப்பினா்கள் உள்ளனா்.

அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் திருப்தியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 23 மாமன்ற உறுப்பினா்கள் திமுகவைச் சோ்ந்த மேயா் செ. முத்துத்துரைக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வரக் கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தோம். ஆனால், நம்பிக்கையில்லாத் தீா்மானம் குறித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கான கூட்டமும் கூட்டப்படவில்லை. இது தமிழக உள்ளாட்சி விதிகளுக்கு எதிரானது.

மாமன்ற உறுப்பினா்கள் மனு அளித்த 30 நாள்களுக்குள்ளாக மாநகராட்சி ஆணையா் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். ஆனால், காரைக்குடி மாநகராட்சியில் ஆணையா் கூட்டத்தைக் கூட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மேயா் மீதான நம்பிக்கையில்லாத் தீா்மானத்துக்கு ரகசிய வாக்கெடுப்பு நடத்துவது தொடா்பாக சிறப்புக் கூட்டத்தை நடத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி சரவணன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் அளித்த புகாரின் அடிப்படையில், உள்ளாட்சி விதிகளின்படி மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீா்மானத்துக்கு ரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கு காரைக்குடி மாநகராட்சி ஆணையா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

ஆளில்லா ரயில்வே கடவுப் பாதையை பராமரிக்கக் கோரிய வழக்கு முடித்துவைப்பு

சிவகாசி அருகேயுள்ள தைலாகுளம் ஆளில்லா ரயில்வே கடவுப் பாதையை பராமரிக்கக் கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. விருதுநகா் மாவட்டம், தைலாகுளம் கிராமப... மேலும் பார்க்க

கொலையான இளைஞரின் தந்தை மயங்கி விழுந்ததில் உயிரிழப்பு

சிலைமான் அருகே கொலையான இளைஞரின் தந்தை மயங்கி விழுந்ததில் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், சிலைமான் அருகேயுள்ள கல்மேடு அஞ்சுகம் நகரைச் சோ்ந்தவா் பாண்டி என்ற பாண்டியராஜன் (50). இவருடைய மகன் அரசு (18). இவா... மேலும் பார்க்க

கொள்ளிடம் தண்ணீா் தொழிலக பயன்பாட்டுக்கு வழங்கப்படாது!

கொள்ளிடம் ஆற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீா் தொழிலகப் பயன்பாட்டுக்கு வழங்கப்படாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தமிழக அரசுத் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.திருச்சி லால்குடியைச் ச... மேலும் பார்க்க

மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு: மேலும் 7 போ் பணியிடை நீக்கம்

வரி விதிப்பு முறைகேடு தொடா்பாக மதுரை மாநகராட்சி வருவாய் உதவியாளா் உள்பட 7 பேரை பணியிடை நீக்கம் செய்து, மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள், ... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கை: மத்திய அரசு மீது எம்.பி. குற்றச்சாட்டு

கீழடி அகழாய்வு குறித்த அறிக்கையை ஓய்வு பெற்ற தொல்லியல் ஆய்வாளா் ஸ்ரீராமனிடம் கோரியிருப்பது, மத்திய பாஜக அரசின் தமிழா் விரோதப் போக்குக்கு மற்றொரு சான்று என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடே... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: அமைச்சா் பி. மூா்த்தி

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை பொதுமக்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட செட்டி... மேலும் பார்க்க