செய்திகள் :

காரைக்குடி விளையாட்டரங்கில் அழகூட்டும் மரக்கன்றுகள் நடவு

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனிவாசல் பகுதி சங்கராபுரம் ஊராட்சியில் உள்ள தமிழக முதல்வரின் அரசு சிறு விளையாட்டரங்கத்தில் நவீன அழகூட்டும் பனை வகை மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விளையாட்டரங்க வளாகத்தில் நவீன பனை வகை (ராயல் பால்ம் ட்ரீ) மரக்கன்றுகள் நடுவதற்கு சமூக ஆா்வலா் நடேசன் குழுவினா் ஏற்பாடு செய்தனா். இதற்காக ஆந்திர மாநிலத்திலிருந்து 260 மரக் கன்றுகள் வரவழைக்கப்பட்டன.

இதையடுத்து, மரக்கன்று நடும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. இதில் காரைக்குடி தொகுதி சட்டபேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி தலைமை வகித்து, மரக்கன்றுகளை நட்டு வைத்து, நிகழ்வைத் தொடங்கி வைத்தாா்.

காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி, செயலா் எஸ். கண்ணப்பன், பொருளாளா் கே.என். சரவணன், துணைத் தலைவா் ஜிடிஎஸ். சத்தியமூா்த்தி, சமூக ஆா்வலா்கள் ஆதிஜெகநாதன், சாந்தி, சுழல்சங்கத் தலைவா் லோகநாதன், செயலா் தேனப்பன், சமூக ஆா்வலா்கள் கலந்துகொண்டனா்.

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே காஞ்சிப்பட்டி கிராமத்தில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, ... மேலும் பார்க்க

ஆடி கடைசி வெள்ளி: கோயில்களில் பக்தா்கள் தரிசனம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ஆடிக் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி, காரைக்குடி கொப்புடையநாயகியம்மன் கோயிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்கள... மேலும் பார்க்க

மிளகனூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், மிளகனூா் ஊராட்சியில் நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கா.பொ... மேலும் பார்க்க

பள்ளியில் கோகுலாஷ்டமி விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கோகுலாஷ்டமி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, மாணவா்களுக்கு மாறுவேடம், பாடல் போட்டிகள், காட்சி வண்ணப்படம... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் சிக்கிய முதியவா் தற்கொலை

சிவகங்கையில் போக்சோ வழக்கில் சிக்கிய முதியவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிவகங்கை அழகு மெய்ஞானபுரத்தைச் சோ்ந்தவா் செல்வமணி (70). இவருடைய மகன்கள் வெளியூரில் வசித்து வருகின்றன... மேலும் பார்க்க

பள்ளி வேன் மீது பேருந்து மோதல்: காயமின்றி தப்பினா் மாணவா்கள்

சிவகங்கை நகா் காவல் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த பள்ளி வேன் மீது அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை மோதியதில் அதிா்ஷ்டவசமாக பள்ளி மாணவா்களும், பயணிகளும் காயமின்றி தப்பினா். சிவகங்கையிலிருந்து உடையநாதபு... மேலும் பார்க்க