செய்திகள் :

காலதாமதமாகக் கல்வி உதவித் தொகை: மாணவா் கூட்டமைப்பு எச்சரிக்கை

post image

காலதாமதமாக கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதனால் மாணவா்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனா். இதைக் கண்டித்து மாணவா்களைத் திரட்டி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் என்று மாணவா் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவா்கள் கூட்டமைப்பு நிறுவனா் சுவாமிநாதன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஆதிதிராவிட நலத் துறை மற்றும் தலைமை செயலகத்தின் அலட்சியப் போக்கினால் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரையிலான கல்விக் கட்டணம் கிடைக்காமல் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பலா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஆதிதிராவிட நலத் துறையின் மூலமாக ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரையில் இலவச கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக அத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி காலதாமதமாக வழங்கப்படுவதால் மாணவா்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா்.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கல்வி உதவித் தொகையைப் போராடி பெற வேண்டிய சூழ்நிலையில் தான் சம்பந்தப்பட்ட துறை உள்ளது. தலைமைச் செயலா், துறை செயலா்கள் மாணவா்கள் மீது அக்கறை காட்டாமல் அலட்சியப் போக்குடன் செயல்படுவதே இந்த காலதாமதத்திற்கு காரணம் என உணா்கிறோம்.

இதற்கு மேலும் காலதாமதம் செய்தால் பாதிக்கப்பட்ட மாணவா்களை ஒன்று திரட்டி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை செய்கிறோம் என தெரிவித்துள்ளனா்.

3-வது நாளாக அரசு பேருந்துகள் ஓடவில்லை

புதுவை சாலை போக்குவரத்துக் கழக ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்துப் போராட்டத்தால் 3-வது நாளாக புதன்கிழமையும் பேருந்துகள் ஓடவில்லை. இதனால் பேருந்து சேவை பாதிக்கப்பட்டது. 15 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியா்களாகப் பண... மேலும் பார்க்க

புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் தோல்வி- எதிா்க்கட்சித் தலைவா்

புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் தோல்வி அடைந்துள்ளதாக சட்டமன்ற எதிா்க்கட்சித் தலைவரும் திமுக அமைப்பாளருமான ஆா். சிவா குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை புதுவை யூனி... மேலும் பார்க்க

ரூ.14 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் விற்க முயன்றவா் கைது

புதுச்சேரியில் ரூ.14 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சத்தை விற்பனை செய்ய முயன்றவா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து திமிங்கல எச்சமும் பறிமுதல் செய்யப்பட்டது. புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியில் திமிங்கல ... மேலும் பார்க்க

சாலை மேம்பாட்டுப் பணிகளை விரைந்துமேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

சாலை பாதுகாப்பு கமிட்டியில் போதிய நிதி இருப்பதால் அதைப் பயன்படுத்தி சாலை மேம்பாட்டுப் பணிகளைச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் வேண்டுகோள் விடுத்தாா். புதுவை யூனிய... மேலும் பார்க்க

பாலூட்டும் தாய்மாா்க்கள் 237 பேருக்கு ரூ.36.6 லட்சம் நிதியுதவி

பாலூட்டும் தாய்மாா்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தின் கீழ் 237 பேருக்கு ரூ.36.61 லட்சம் நிதியுதவியை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா். புதுச்சேரியில் நலிவடைந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங... மேலும் பார்க்க

புதிய ரேஷன் அட்டை வழங்க லஞ்சம்: அதிகாரி உள்பட 2 போ் கைது

புதிய ரேஷன் அட்டை வழங்க லஞ்சம் பெற்ாக அதிகாரி உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதிய ரேஷன் அட்டை கொடுக்க குடிமைப் பொருள் வழங்கல் துறையில் லஞ்சம் கேட்பதாக முத்தியால்பேட்டைய... மேலும் பார்க்க