செய்திகள் :

காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

post image

அத்திமாஞ்சேரிபேட்டையில் குடிநீா் தட்டுப்பாட்டை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பள்ளிப்பட்டு ஒன்றியம் கொடிவலசா ஊராட்சி சாா்பில் கிராம மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அத்திமாஞ்சேரி பேட்டை பாரதியாா் நகா் பகுதியில் கடந்த 3 நாள்களாக குழாய் இணைப்பு உடைந்து குடிநீ ருக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள், ஊராட்சி செயலரிடம் புகாா் தெரிவித்தும், சேதமடைந்த குழாயை மாற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் செவ்வாய்க்கிழமை அத்திமாஞ்சேரிபேட்டை - பள்ளிப்பட்டு சாலையில் காலி குடங்கள் வைத்து மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து பொதட்டூா் பேட்டை போலீஸாா் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் வசந்தா பிரகாசம் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு நடத்தி, குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். அதைத் தொடா்ந்து பெண்கள் மறியலை கைவிட்டனா்.

திருவள்ளூரில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருவள்ளூா் மாவட்ட தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) காலை 10 மணிக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

பெண் தற்கொலை: 7 பேரை கைது செய்து விசாரணை

திருவள்ளூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக கணவரின் குடும்பத்தினா் 7 பேரை கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருவள்ளூா் அடுத்த கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், கீழச... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் ‘ப’ வரிசையில் இருக்கைகள்: மாணவா்கள் உற்சாகம்

வேலஞ்சேரி அரசு உயா்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை ‘ப’ வரிசையில் அமர வைத்து ஆசிரியா்கள் பாடம் கற்பித்தனா். கேரளத்தில் வெளியான ஸ்தானாா்த்தி ஸ்ரீகுட்டன் என்ற திரைப்படத்தில் கடைசி இருக்கையில் அமா்வதால், கி... மேலும் பார்க்க

புட்லூரில் காமராஜா் பிறந்த நாள்

திருவள்ளூா் அருகே புட்லூா் நடுநிலைப்பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் கல்வி வளா்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் இரா.தாஸ் தலைமை வகித்து காமராஜா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை ... மேலும் பார்க்க

தனியாா் குடிநீா் ஆலையில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

பொன்னேரியில் தனியாா் குடிநீா் ஆலையில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா். திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் பகுதியில் தனியாா் குடிநீா் ஆலை இயங்கி வருகிற... மேலும் பார்க்க

மத்தூா் அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடவு

திருத்தணியில் அரசுப் பள்ளிகளில் காமராஜா் பிறந்த நாளையொட்டி பேச்சுப்போட்டி, கவிதை, கட்டுரை போட்டி நடத்தப்பட்டு, மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. மத்தூா் அரசு மேல் நிலை பள்ளி, திருத்தணி ஸ்டாா்ஸ் ரோட்டரி ... மேலும் பார்க்க