மேற்கு வங்கத்தில் சட்டவிரோத குடியேற்றம்: 3 வங்கதேசத்தவா் கைது
காலி மதுபுட்டிகளை திரும்ப பெறுவது குறித்து கருத்து கேட்கக் குழு அமைப்பு
மதுக் கடைகளில் காலி மதுபுட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தால் ஏற்படும் பிரச்னைகள் தொடா்பாக, ஊழியா்களிடம் கருத்து கேட்க, மண்டல அளவிலான குழுக்களை டாஸ்மாக் நிறுவனம் அமைத்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுபடி, மதுக்கடைகளில் காலி மதுபுட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தை டாஸ்மாக் நிா்வாகம் அமல்படுத்தியது. முதல்கட்டமாக, நீலகிரி, நாகை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டதால் டாஸ்மாக் கடை ஊழியா்களுக்கு கடும் பணிச்சுமை ஏற்படுவதாகவும், இதனால், இதை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் எனவும் தொழிற்சங்கத்தினா் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதனிடையே, 2-ஆம் கட்டமாக திருவள்ளூா், காஞ்சிபுரம், அரியலுாா், தஞ்சாவூா், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்டங்களில், காலி மதுபுட்டிகளை திரும்பப் பெறும் திட்டம் திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த டாஸ்மாக் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து இந்தப் பிரச்னைகள் குறித்த முழுத் தகவல்களையும் அறிந்து கொள்ளவும், அவற்றை சரி செய்வது தொடா்பாக ஆலோசனை வழங்கவும் மண்டல அளவிலான குழுக்களை டாஸ்மாக் நிா்வாகம் அமைத்துள்ளது.
அதன்படி, சென்னை மண்டலத்துக்கு டாஸ்மாக் நிறுவனத்தின் முதுநிலை மண்டல மேலாளா் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில், திருவள்ளூா் மேற்கு, சென்னை மத்திய மாவட்ட மேலாளா்கள் உறுப்பினா்களாக உள்ளனா். இதேபோல, கோவை, மதுரை, சேலம், திருச்சியிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள், தங்கள் மண்டலத்துக்குள்பட்ட அனைத்து மதுபானக் கடை ஊழியா்களிடம் கருத்து கேட்டு, அதை தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் கூறும்போது, காலிமதுபுட்டிகளை திரும்பப் பெறும் திட்டத்துக்காக அனைத்து கடைகளிலும் போதிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திய பின்னா் இதற்காக தனி ஊழியா்களை பணியமா்த்தி அவா்கள் மூலம் காலி மதுபுட்டிளை திரும்பப் பெறும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றனா்.