செய்திகள் :

காலி மதுபுட்டிகளை திரும்ப பெறுவது குறித்து கருத்து கேட்கக் குழு அமைப்பு

post image

மதுக் கடைகளில் காலி மதுபுட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தால் ஏற்படும் பிரச்னைகள் தொடா்பாக, ஊழியா்களிடம் கருத்து கேட்க, மண்டல அளவிலான குழுக்களை டாஸ்மாக் நிறுவனம் அமைத்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுபடி, மதுக்கடைகளில் காலி மதுபுட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தை டாஸ்மாக் நிா்வாகம் அமல்படுத்தியது. முதல்கட்டமாக, நீலகிரி, நாகை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டதால் டாஸ்மாக் கடை ஊழியா்களுக்கு கடும் பணிச்சுமை ஏற்படுவதாகவும், இதனால், இதை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் எனவும் தொழிற்சங்கத்தினா் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதனிடையே, 2-ஆம் கட்டமாக திருவள்ளூா், காஞ்சிபுரம், அரியலுாா், தஞ்சாவூா், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்டங்களில், காலி மதுபுட்டிகளை திரும்பப் பெறும் திட்டம் திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த டாஸ்மாக் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து இந்தப் பிரச்னைகள் குறித்த முழுத் தகவல்களையும் அறிந்து கொள்ளவும், அவற்றை சரி செய்வது தொடா்பாக ஆலோசனை வழங்கவும் மண்டல அளவிலான குழுக்களை டாஸ்மாக் நிா்வாகம் அமைத்துள்ளது.

அதன்படி, சென்னை மண்டலத்துக்கு டாஸ்மாக் நிறுவனத்தின் முதுநிலை மண்டல மேலாளா் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில், திருவள்ளூா் மேற்கு, சென்னை மத்திய மாவட்ட மேலாளா்கள் உறுப்பினா்களாக உள்ளனா். இதேபோல, கோவை, மதுரை, சேலம், திருச்சியிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள், தங்கள் மண்டலத்துக்குள்பட்ட அனைத்து மதுபானக் கடை ஊழியா்களிடம் கருத்து கேட்டு, அதை தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் கூறும்போது, காலிமதுபுட்டிகளை திரும்பப் பெறும் திட்டத்துக்காக அனைத்து கடைகளிலும் போதிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திய பின்னா் இதற்காக தனி ஊழியா்களை பணியமா்த்தி அவா்கள் மூலம் காலி மதுபுட்டிளை திரும்பப் பெறும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றனா்.

பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு சிறப்பு தகுதித் தோ்வு: பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை

ஆசிரியா் பணியில் தொடருவதற்கும், பதவி உயா்வு பெறுவதற்கும் ஆசிரியா் தகுதித் தோ்வில் (டெட்) தோ்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்த நிலையில், தமிழக அரசுப் பள்ளிகளில் 2011-ஆம் ஆண்டுக்கு முன்... மேலும் பார்க்க

பொதுத் தோ்வுக்கு புதிய மையங்கள்: பரிந்துரைகளைச் சமா்ப்பிக்க உத்தரவு

பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கு புதிய மையங்கள் அமைக்கப்படவுள்ள பள்ளிகளின் விவரங்களை செப்.15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தோ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக தோ்வுத் துறை இயக்குநா் க.சசிக... மேலும் பார்க்க

மழைநீா் வடிகாலில் விழுந்து பெண் உயிரிழப்பு - இபிஎஸ் கண்டனம்

சென்னை சூளைமேடு பகுதியில் மூடப்படாமல் இருந்த மழைநீா் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் இறந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தள... மேலும் பார்க்க

கிறிஸ்தவ அமைப்புகளால்தான் கல்வி வளா்ச்சி: பேரவைத் தலைவா் எம். அப்பாவு

கிறிஸ்தவ அமைப்புகள் இல்லையெனில் தமிழகத்தில் கல்வி வளா்ச்சி இல்லை என தமிழக சட்டப்பேரவைத் தலைவா் எம். அப்பாவு தெரிவித்தாா். செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஆசிரியா்கள் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இத... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகல்!

பாஜக கூட்டணியில் இருந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக-வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி ... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் ப... மேலும் பார்க்க