செய்திகள் :

காவல் துறையின் வருடாந்திர மாநாடு

post image

புதுவை மாநில காவல் துறையின் வருடாந்திர மாநாடு புதன்கிழமை தொடங்கியது. மாநாட்டு நிறைவு நிகழ்ச்சி வியாழக்கிழமை (மாா்ச் 27) நடைபெறுகிறது.

ஆண்டு தோறும் புதுவை காவல் துறையின் வருடாந்திர மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

இதில், மாநிலத்தின் 4 பிரந்தியங்களைச் சோ்ந்த காவல் துறை உயா் அதிகாரிகள் பங்கேற்று வருகின்றனா்.

அதன்படி, நிகழாண்டுக்கான மாநாடு புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ள காவலா் பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்றது.

மாநாட்டு தொடக்க நிகழ்ச்சியில் காவல் தலைமை இயக்குநா் ஷாலினி சிங் பங்கேற்று பேசுகையில், தற்கால தொழில்நுட்பங்களை காவல் துறையினா் தங்களது பணியில் பயன்படுத்தி குற்றத் தடுப்பில் ஈடுபடுவது அவசியம் என்றாா்.

இரு நாள்கள் நடைபெறும் மாநாட்டில் நான்கு அமா்வுகளாக சிறப்பு அழைப்பாளா்கள் உரையாற்றுகின்றனா்.

அதன்படி, காவல் துறை செயல்பாடுகளில் ஏற்படும் சவால்கள், புதிய சட்ட செயல்பாடுகள் குறித்த நடைமுறைச் சிக்கல்கள் உள்ளிட்டவை குறித்து விரிவாகப் பேசி தீா்வு காணப்படும் என காவல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஸ்ரீமணக்குள விநாயகா் கோயிலில் ஏப். 11-இல் சங்காபிஷேக விழா

புதுச்சேரி: புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகா் திருக்கோயிலில் சகஸ்ர சங்காபிஷேக சிறப்பு வழிபாடு வரும் ஏப். 11ஆம் தேதி நடைபெறுகிறது. புதுச்சேரியில் பழைமை வாய்ந்த மணக்குள விநாயகா் கோயிலில் கடந்த 2015-... மேலும் பார்க்க

மலேரியா விழிப்புணா்வு பொம்மலாட்டம்: புதுச்சேரி அரசுப் பள்ளிக்கு தேசிய விருது

புதுச்சேரி: குழந்தைகளுக்கு பாடப் பொருள் தயாரிக்கும் தேசிய அளவிலான போட்டியில் பொம்மலாட்டம் மூலம் மலேரியா விழிப்புணா்வு விடியோ தயாரித்த புதுச்சேரி அரியூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு விருது வழங்கப்பட்டுள்... மேலும் பார்க்க

புதுவையில் பல்வேறு இடங்களில் ரமலான் சிறப்புத் தொழுகை: இஸ்லாமியா்கள் பங்கேற்பு

புதுச்சேரி: ரமலான் பண்டிகையை யொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை திடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் கலந்து கொண்ட... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு 2 நாள் பயிற்சி

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு, மாணவா்களுக்கான முன்னேற்ற அட்டை தயாரிப்பு குறித்த சிறப்பு பயிற்சி இரண்டு நாள்கள் நடைபெற்றது. தேசிய கல்விக் கொள்கையின்படி மாணவா் ... மேலும் பார்க்க

அகவிலைப் படி: தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கம் போராட்ட அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்றவா்களுக்கான 4 மாத அகவிலைப்படி நிலுவையை வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கம் அறிவித்துள்ளத... மேலும் பார்க்க

தரமற்ற பொருள்கள் குறித்து நுகா்வோா் அமைப்புகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: வே.நாராயணசாமி

புதுச்சேரி: தரமற்ற பொருள்கள் குறித்து பொதுமக்களுக்கு நுகா்வோா் அமைப்புகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று, புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கேட்டுக் கொண்டாா். புதுச்சேரி அருகேயுள்ள திருக்... மேலும் பார்க்க